இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்..! விக்ரமராஜா பரபரப்பு பேட்டி..!!
தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை சார்பாக மே 5 தேதி வணிகர் விடுதலை முழக்கம் மாநாடு மதுரையில் நடைபெறுகிறது. இதுவரை 40 மாநாடுகள் நடத்தி இருக்கிறோம் இதுவரை காலையிலிருந்து மாலை வரை நடைபெறும் இந்த மாநாட்டில் இருந்து தமிழ்நாடு முழுவதும் இருந்து பல லட்சம் வணிகர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
குறிப்பாக மதுரையில் இருந்து பத்தாயிரம் வணிகர்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ள உள்ளனர். இந்த மாநாட்டில் எங்களுக்கு இழக்கப்படுகின்ற கொடுமையான சட்ட விதிகளை அகற்ற கோரியும், சாமானிய வணிகர்களிடம் வரி சீரமைப்பு என்ற பேரில் கடைக்கு சீல் வைப்பு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், டோல்கேட்டில் கடுமையான கட்டணம் வசூலிப்பதை கண்டித்தும் இந்த மாநாட்டில் அறிவிக்க உள்ளோம்.
இந்த மாநாடு வெற்றி மாநாடாக அமையும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. இந்த மாநாட்டில் சிறு வணிகர்களின் பாதுகாப்பில்லாத சூழ்நிலையை நிலை உருவாகியுள்ளது. ஆன்லைன் வர்த்தகம் அமல்படுத்தும் போது சிறுவணிகர்கள் நிலை குறித்து விளக்க “விடுதலை முழத்த மாநாடு” நடைபெறுகிறது.
உரிமைகளுக்காக சிறு வணிகர்களை பாதுகாக்க இந்த அரசு சிறப்பு பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும். வணிகர்களை தாக்குபவர்கள் மீது சிறப்பு பாதுகாப்பு சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மருத்துவர்களுக்கான சிறப்பு சட்டங்கள் உள்ளது போல் வணிகர்களுக்கு சிறப்பு சட்டத்தை உருவாக்க வேண்டும். வணிகர்களை தாக்கி காயத்தை ஏற்படுத்தும் நபர்கள் மீது சிறப்பு சட்டத்தின் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் தள்ள வேண்டும்.
வணிகர்கள் மக்களிடம் சேவை செய்கின்றனர் அவர்களுக்கு இந்த சிறப்பு பாதுகாப்பு சட்டத்தின் மூலம் வணிக விடுதலை முழக்க மாநாட்டில் பிரகடனத்தை அறிவிக்க உள்ளோம்.
அதைபோல் வணிகர்கள் 2 லட்சம் ரூபாய் பணத்தை கொண்டு சென்றால் தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றி தேர்தல் அலுவலரிடம் ஒப்படைக்க கூடாது உரிய ஆவங்களின்றி கொண்டு செல்லும் பணத்தை.., ஆவணம் காண்பித்தாலும் தர மறுக்கிறார்கள். இந்த நிலையை மாற்ற வேண்டும்.
கரூரில் வியாபாரி கொண்டு வந்த 47000 பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்துள்ளனர். இதனால் அன்றைய நாள் முழுவதும் பணத்தை மீட்கும் செயலில் இருந்ததால் அவரால் வியாபாரத்தை கவனித்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகள் எங்கு பணம் வைத்துள்ளனர் எங்கு கொண்டு போகின்றனர் என்பதை எல்லாம் அதிகாரிகளுக்கு தெரியும். ஆனால் பறிக்கப்படுவது எல்லாம் சாமானிய பொதுமக்கள் பணம் வணிகர்கள் பணம் மட்டுமே
டோல்கேட் அகற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம் செங்கல்பட்டு டோல்கேட்டில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். மொத்தம் 37 டோல்கேட்டில் இதுபோன்ற பிரச்சனை உள்ளது.
மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூட காலவதியான டோல் கேட் அகற்ற கூறியுள்ளார். டோள்கள் அகற்றப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். மதுரை மக்கள்சகிப்புத்தன்மையுடன் இருப்பவர்கள், முன்பு 50 காசு பெட்ரோல், டீசல் விலை ஏறினால் 100 போராட்டங்கள் நடைபெறும்.
இப்ப மக்கள் போராட்டம் செய்வது விட்டு விட்டார்கள். மருத்துவர்கள் கூறிய போல் சுகரை குறைக்க வேண்டும் என்று கூறியது போல் மக்களுக்கு உணர்வுகளை குறைக்க ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் வணிகர் சங்கம் இந்த பிரச்சனையை கையில் எடுக்கும்.
சாதாரண வியாபாரிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் கார்ப்பரேட் கம்பெனிகள் மூலம் தான் வரிகள் கிடைக்கின்றது என்ற சூழ்நிலை உள்ளது ஆனால் ஒரு சிகரெட்டு வியாபாரி கூட வரி கட்டி தான் சிகரெட் விற்பனை செய்கிறார் அரசு சாமானியர்களை ஒதுக்கி விட்டால் இந்தியா முழுவதும் 21 கோடி வியாபாரிகள் உள்ளோம் இவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தருமா எத்தனையோ பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளோம்.
நாடாளுமன்ற தேர்தலில் வணிகர் சங்க நிலை :
எங்கள் கோரிக்கைகளை ஏற்று எழுத்துப்பூர்வமாக தரும் கட்சிகளுக்கு எங்கள் ஆதரவை பொதுக்குழு மூலம் அறிவிப்போம் பெயர் பலகை தமிழ் திறப்பது குறித்த கேள்விக்கு முன்பெல்லாம் ஒரு ஊருக்கு சென்றாள் ஊரின் முகவரி கடை விலாசம் போன்றவை இருக்கும் ஆனால் தற்போது கார்ப்பரேட் கம்பெனிகள் வந்ததால் கார்ப்பரேட் நிறுவனங்களில் பெயர் மட்டுமே உள்ளது ஆனால் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது.
தற்போது தமிழில் பெயர் எழுத வேண்டும் என்று கூறுகிறோம் எந்த மொழியில் வைத்திருந்தாலும் நீங்கள் ஆனால் தமிழ் மொழியில் பேர் பலகை வைக்க வேண்டும் என்று மற்றும் ஊரின் பெயரை போட வேண்டும் என்று கூறுகிறோம் என விக்ரம ராஜா கூறினார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..