சுயேட்சை சின்னத்தில் ஓபிஎஸ் நிற்க இது தான் காரணமா..?
வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஓ.பன்னீர்செல்வம் பாஜக கூட்டணியில் இணைந்து தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டிருந்தார், ஆனால் பாஜகவின் நிர்வாகிகள் சிலர் பேச்சுவார்த்தையில் ஒப்புவராததால் பன்னீர் செல்வத்திற்கு எந்த தொகுதி என்பதை பாஜக அறிவிக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “இரட்டை இலை சின்னத்தை” கைப்பற்றுவதற்காக பல முயற்சி செய்து வருகிறோம், அதற்காக எங்கள் மீது போடப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் மக்களவை தேர்தல் தேதி அறிவித்ததை தொடர்ந்து 15 சீட்டுகள் கேட்டுள்ளோம் எங்கள் கட்சியின் தொண்டர்களும் இரட்டை இலை சின்னத்தில் தான் நிற்க வேண்டும் என ஆசைப்படுகிறார்கள்.
விஜயதாரணிக்கு அண்ணாமலை கொடுத்த அல்வா…? படிக்க இங்கே க்ளிக் செய்யவும்
சின்னத்தை வாங்குவதற்கு காலதமாதம் ஆனாலும் எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்ததில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடலாம் என முடிவு செய்துள்ளேன். அதிலும் குறிப்பாக சுயேட்சை சின்னத்தில் நின்று போட்டியிட இருக்கிறேன்.
ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட காரணம் அநீதிக்கும், நீதிக்கும் எதிராக செயல்படுபவர்கள் முன் விஸ்வரூபம் எடுத்து வெற்றி பெறுவேன் எனத் தெரிவித்துள்ளார்.
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..