எங்க கிட்ட தண்ணீர் இல்ல.., கர்நாடக..!! தமிழக அரசின் அடுத்த முடிவு இது தான்..!
காவிரியில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்துள்ள நிலையில், காவிரி மேலாண்மை ஆணையம் இன்று கூடுகிறது.
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி கர்நாடக அரசு தரவேண்டிய உரிய அளவு தண்ணீரை கடந்த சில மாதங்களாகவே அம்மாநில அரசு தராமல் மறுத்து வருகிறது.
இதனால் காவிரி ஒழுங்காற்று குழு, காவிரி மேலாண்மை வாரியம், ஒன்றிய அரசு என பல்வேறு முறைகளில் தங்களது கோரிக்கைகளை தமிழக அரசு முன்வைத்து வருகிறது.
நேற்று முன்தினம் காவிரி ஒழுங்காற்று குழு ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் கலந்து கொண்ட அதிகாரிகள் தமிழகத்திற்கு வினாடிக்கு 13 ஆயிரம் கனஅடி நீர் வீதம் தண்ணீர் அடுத்த 15 நாட்களுக்கு திறந்து விட வேண்டும்என்று கோரிக்கை வைத்தனர்.
ஆனால், வழக்கம் போல தங்களிடம் போதிய தண்ணீர் இல்லை என கர்நாடக அரசு கூறியது.
அதன் பின்னர், அக்டோபர் 16 முதல் 31ம் தேதி வரை வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் வீதம் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு திறக்க வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்து இருந்தது.
இந்நிலையில், இன்று காவிரி மேலாண்மை வாரிய தலைவர் எஸ்.கே.ஹெல்தர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது.
இன்றைய கூட்டத்தில் தமிழகத்துக்கு வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடி நீர் வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட உள்ளது….
Discussion about this post