நோயெதிர்ப்பு சக்தி அதிகமாக இந்த பானங்களை குடித்தால் போதும்…
நோயெதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் தான் , உங்கள் உடலை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகமாக இந்த பானங்களை குடித்தால் போதும் ………
நோயெதிர்ப்பு சக்தி என்றால் என்ன, அது எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அனைவரும் கொரோனா காலத்தில் அறிந்திருப்போம். அதற்காக நாம் பலவிதமான கஷாயங்களை குடித்திருப்போம் . நோயெதிர்ப்பு சக்தி குறைந்தால் நம் உடலில் அடிக்கடி சளி ,இருமல் ,தும்மல் , காய்ச்சல் ஆகியவை ஏற்படும். இதனை தவிர்க்க வீட்டிலியே நல்ல பானங்கள் தயாரித்து குடிப்பது நல்லது அவற்றை பார்க்கலாம் .
1. நாம் தினமும் குடிக்கும் டீயில் இஞ்சி ,ஏலக்காய் ,பட்டை தூள் ஆகியவற்றை சேர்த்து குடிப்பது நல்லது .
2. ரோஸ் பால் என்பது சூடான பாலில் சிறிது ஏலக்காய் ,ரோஜா இதழ்களை சேர்த்து குடிக்கலாம் .
3. குங்குமப்பூ பாதாம் பால் என்பது பாலில் சிறிது குங்குமப்பூ ,ஊறவைத்த 10 பாதம் பருப்புகளை தூளாக்கி , பாலுடன் சேர்த்து , குடித்து வர உடலில் சக்தி அதிகரிக்கும் .
4. பாலில் சிறிது மஞ்சள் ,மிளகு தூள் , தேன் ஆகியவற்றை சேர்த்து குடித்தால் உடலில் சளி சேராமல் தடுக்கும் .
இந்த எல்லா பானங்களுடனும் இனிப்பு சுவை தேவை பட்டாள் நாட்டு சர்க்கரை அல்லது தேன் சேர்த்து வாரத்திற்கு 4 நாட்கள் குடித்து வந்தால் உடம்பில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து ,நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம் .
உங்கள் உடலுக்கு ஏற்ற திரவத்தை தேர்ந்தெடுத்து குடித்து வருவது நன்மை பயக்கும் .
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.