உங்கள் சருமமும் குழந்தைபோல் இருக்க வேண்டும்..? இந்த ரகசியம் கேளுங்க..!
நூற்றில் 70 பேருக்காவது ஆயில் பிசுபிசுப்பு தன்மை மற்றும், வறண்ட சருமம் இருக்கும். ஒரு சிலர்க்கு மட்டும் தான் மென்மையான சருமம் இருக்கும். மென்மையான சருமம் வேண்டும் என பல விதமான க்ரீம் களை முகத்தில் பூசுவது என நாம் செய்வோம்.
ஆனால் அவற்றை நாம் இயற்கையாகவே வீட்டிலேயே செய்யலாம். அதற்கான சில டிப்ஸ்களை பார்க்கலாம்.
கருமை : குங்குமப் பூவை பொடி செய்து அதை பாலில் கலந்து முகத்தில் தேய்த்து 20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
![]()
20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். வாரத்திற்கு மூன்று முறை இப்படி செய்தால், கருமை நீங்கி விடும்.
எண்ணெய் பசை நீங்க : ஆரஞ்சு பழச் சாற்றை ஒரு ஸ்பூன் எடுத்து, குளிர்ந்த நீரில் கலந்து 20 நிமிடம் முகத்தில் ஊற வைக்க வேண்டும்.

பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால், எண்ணெய்ப் பிசுபிசுப்பு நீங்கி விடும். வாரத்திற்கு இருமுறை இதை செய்தால் போதும்.
மேலும் இதுபோன்ற பல அழகு குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ.லோகேஸ்வரி

















