சாப்பிடும் போது புரையேறினால் தட்டுவதற்கான காரணம் தெரிந்துக்கொள்ள வேண்டுமா? அப்போ இதை படிங்க
நாம் சாப்பிட்டு கொண்டிருக்கும் திடீரென புரையேறுவது வழக்கம். ஆனால் ஒரு சிலர் சொல்வார்கள், யாராவது சாப்பிடும் பொழுது திட்டினாலோ, நினைத்தாலோ புரையேறும் என்று. ஆனால் அது தவறு.
அதற்கான உண்மை காரணத்தை சொல்கிறார். மருத்துவர் பி.நடராஜ்
நம் உடலில் தொண்டை பகுதியில் மூச்சு விடுவதற்கும், சாப்பிடும் உணவு உள்ளே செல்வதற்கும் சேர்த்து ஒரே உணவுக்குழாய் தான் இருக்கிறது.
நாம் விடும் மூச்சும் கூட மூக்கின் வழியே சென்று தான் நுரையீரலின் முன் பக்கத்தை சென்றடையும். உணவுக்குழாய் ஆனது நுரையீரலுக்கு பின் பக்கம் செல்லும். எனவே நாம் உண்ணும் பொழுது இரண்டும் குறுக்கிடுவதால் புரையேறுகிறது.
மனிதர்களிடம் குரல்நாண் இருப்பதால் நாம் பேசும் பொழுது மூச்சுக்குழாய் மூடிவிடும். எனவே நாம் சாப்பிடும் உணவாக இருந்தாலும் சரி, குடிக்கும் தண்ணீராக இருந்தாலும் சரி மூச்சுக் குழாய்க்கு செல்லாமல், உணவுக்குழாய்க்கு செல்லும்.
நாம் வேகமாக சாப்பிடும் பொழுது அதில் ஒரு பருக்கையாவது மூச்சுகுழாய் வழியே சென்று விடும், எனவே தான் இந்த புரையேறும் பிரச்னை ஏற்படுகிறது.
அப்படி நேரடியாக நுரையீரலுக்கு சென்றால் ஏதாவது உடல் சார்ந்த நோய்கள் ஏற்படுமா? என்று நீங்கள் நினைக்கலாம். சாதாரணமானவர்களுக்கு ஏதும் பாதிப்பு இல்லை.
அதுவே உடல் படுத்த படுக்கையாக இருப்பவர்கள், பக்கவாதம் வந்தவர்களுக்கு குரல் நாண் செயல் இழந்து இருக்கும். எனவே அவர்களுக்கு கொடுக்கப்படும் உணவை மசித்து கொடுத்தால், நுரையீரலுக்கு செல்லாமல் இருக்கும்.
அப்படி உணவை மசித்து கொடுக்காமல், கொடுத்தால் இரும்பல் அதிகமாக இருக்கும். மேலும் சுவாச குழாய் சீராக செல்லாது.
யாராக இருந்தாலும் புரையேறும் பொழுது ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். மூச்சை நன்கு இழுத்து விட வேண்டும் சற்று வெளிகாற்றை சுவாசித்து ரிலாக்ஸ் செய்ய வேண்டும். புரையேறியவரை முதுகில் தட்டும் பொழுது. மூச்சு சுவாசத்தை சீராக்கி விடும். எனவே தான் புரையேறும் பொழுது முதுகில், தலையில் தட்டுகிறார்கள். என விளக்கம் கொடுத்தார் மருத்துவர் பி.நடராஜ்.
Discussion about this post