கேரளவில் மத்தனம்திட்டா மாவட்டத்தில் மனிபலா ஆற்றில் பேரிடர் மீட்பு பயிற்சி ஒத்திகை நேற்று நடைபெற்றது.இதில், பினு சோமன் என்ற நபர் தன்னார்வலராக பங்கேற்றார். அப்போது ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார் இந்த செய்தி கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலத்திலுள்ள கீழுவைப்பூர் பகுதியில் மணிபலா என்ற ஆற்றில் மீது படையினரின் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது அதில் 34 வயதான பினு சோமன் என்ற தன்னார்வலர் கலந்துகொண்டார். அந்த பயிற்சியில், ஆற்றில் வெள்ளத்தில் பினு தத்தளிப்பது போன்று முயற்சிக்கும்போது அவரை பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்து சென்று மீட்பதே பயிற்சியின் நோக்கம்.
பயிற்சிக்காக பினு சோமன் ஆற்றுக்குள் தத்தளிப்பது போன்று ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது திடீரென ஆற்று நீரில் அவர் அடித்து செல்லப்பட்டார். பேரிடர் மீட்பு பயிற்சி ஒத்திகையின் போது சரியான முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையில் கவன குறைவால் பினு ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பினுவை பேரிடர் மீட்பு படையினரின் நீண்ட நேர தேடலுக்கு பிறகு அவரது உடல் கண்டுபிடிபட்டது.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பேரிடர் மீட்பு பயிற்சி ஒத்திகையின் போது தன்னார்வலர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக துறை ரீதியில் விரிவான விசாரணை நடத்த கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.