விஷால் – எனக்காக வேண்டிகோங்க..! மக்கள் – டைம் இல்ல..!! விஷால் கேட்டது..?
கடந்த சில மாதங்களாகவே நடிகர் விஷால் நானும் கட்சி ஆரமிக்க போகிறேன், அரசியல் வர போகிறேன் என சொல்லிக் கொண்டு இருந்தார்.., அது மட்டுமல்ல கடந்த சில மாதங்களாகவே நடிகர் விஷால்., இளைய தளபதி விஜய்-ன் ஸ்டைலை பாளோ பண்ணி கொண்டு இருக்கிறார்.,
இந்த சமயத்தில் நடிகர் விஷால் மக்களிடம் இப்படி கேட்கலாமா..? அப்படி விஷால் என்ன தான் கேட்டார்.., மக்களின் கருத்து என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.
இளைய தளபதி விஜய் “தமிழக வெற்றிக் கழகம்” என்ற கட்சியை தொடங்கி அதற்க்கான செயலில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது நடிகர் விஷால் கடந்த பிப்ரவரி மாதம் 7ம் தேதி நடிகர் விஷால் “மக்கள் நல இயக்கம்” என்ற கட்சியை தொடங்கினார்.
விஷால் பிலில் பேக்ட்ரி ஒரு பக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் தனது ரசிகர் மன்றத்தை மக்கள் நல இயக்கம் என மாற்றினார்.
ஆனால் தளபதி விஜய் ரசிகர் மன்றம் உருவான ஆரம்ப காலத்திலேயே “விஜய் மக்கள் இயக்கம்” தொடங்கி மக்களுக்கு பல நல திட்டங்களை செய்ய ஆரம்பித்தார்.., விஜய் பாட சாலை, விஜய் உணவகம், விஜய் குருதியகம் என பல நல்லதை செய்து வந்தார்..,
ஆனால் விஷால் ரசிகர் மன்றம் மட்டுமே ஆரம்பித்தார்.., இதுவே பலரிடத்தில் விஷாலின் இந்த செயல் முகத்தை சுழிக்க வைத்தது.
ஒரு மனிதன் சிறந்த மனிதனாக இருந்தால் அவரை பார்த்து நாமும் வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும் அதில் தவறில்லை ஆனால் நடிகர் விஷால் தளபதி விஜய்-ன் அனைத்து செயல்களையும் காப்பி அடிக்க தொடங்கினார்..,
கடந்த ஆண்டு தளபதி விஜய் சைக்கிளில் வந்து வாக்கு செலுத்தினார்.., அதே தான் விஷால் இந்த முறை செய்துள்ளார்.., ஆனால் அந்த சமயத்தில் ஒரு ஆள் கூட அவரின் பின்னால் வரவில்லை என்பதை குறிப்பிடதக்கது.
இதுகுறித்து நடிகர் விஷாலிடம் நம் மதிமுகம் நிபுணர் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்,
கேள்வி : கட்சி ஆரம்பிக்க காரணம்..?
மக்களுக்காக மக்களின் ஒருவனாக நான் குரல் கொடுக்க ஆசை.., ஒரு நடிகனாக மட்டும்மல்ல சிறந்த சமுக சேவகனாக இருந்து வந்த நான் கட்சி ஆரம்பித்தேன் என்றால் அதற்கு காரணம் எப்பொழுதும் நான் மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்ற ஒரு ஆசைதான்.
கேள்வி :
மக்கள் ஏற்றுக்கொண்டார்களா..?
நான் நடிகனாக நடிக்க ஆரம்பித்ததில் இருந்து என்னை அவங்க வீட்டு பையனா பாக்குறாங்க அப்படி இருக்குற அப்போ நான் அரசியலுக்கு வந்தால் அதை நம் மக்கள் நிச்சயம் ஏற்றுக்கொள்வார்கள்.
என பதில் அளித்திருந்தார். இந்நிலையில் நடிகர் விஷால் ஒரு பரபரப்பான தகவல் ஒன்றை இணைய தளத்தில் பகிர்ந்துள்ளார் அதாவது “நான் அரசியலுக்கு வர கூடாதுனு இறைவனிடம்” வேண்டி கொள்ளுங்கள் என இணைய தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இவரின் இந்த பதிர்வுக்கு மக்கள் “சாரி டைம் இல்ல” என்றும் “நீ வரக் கூடாதுன்னு நான் ஏன்டா வேண்டனும்.? உனக்கு வேணும்னா நீ வேண்டிக்கோ” என்றும் நீ நடிக்கவே கூடாதுன்னு கூட தான் நாங்க ஆசை படுகிறோம் என்றும் அவரின் பதிவின் கீழ் பதிவிட்டு வருகின்றனர்..
மக்களிடம் இதற்கு வரவேற்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்த விஷாலுக்கு இந்த கமெண்ட்ஸ் பதிலடி கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது.