சீமானுடன் தன் கணவர் பாக்ஸிங் செய்ய தயாராக உள்ளதாக தமிழர் முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமி தெரிவித்துள்ளார்.
சீமான் விஜயலட்சுமி விவாகரத்தில் விஜயலட்சுமிக்கு ஆதரவாக தமிழர் முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமி குரல் கொடுத்தார். இதற்கு எதிராக நாம் தமிழர் கட்சியினர் வீரலட்சுமியை ஆபாசமாக பேசி வருவதாகவும் குற்றச்சாட்டு முன்வைத்தார். பொது வெளியிலையே சீமான் மற்றும் வீரலட்சுமி மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் வீரலட்சுமி இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் பேசியதாவது,
நான் இப்போது நின்று கொண்டிருக்கும் இடம் திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூர் வட்டம் தொட்டிக்கலை பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிரவுண்ட். இந்த இடத்தைத்தான், என் கணவர் கணேசனுடன் நீங்கள் (சீமான்) சண்டை போடுவதற்கான இடமாக தீர்மானித்திருக்கிறோம்.
2024ம் ஆண்டு தை மாதம் காணும் பொங்கல் அன்று எனது கணவருக்கும், உங்களுக்கும் இங்குதான் சண்டை நடக்க போகிறது. இந்த சண்டையில் பாக்ஸிங், கராத்தே, குங்பூ, மல்யுத்தம்… இதில் எந்த சண்டை வேண்டுமென்றாலும் செய்யலாம். அனைத்தையும் சமாளிக்க எனது கணவர் தயாராக இருக்கிறார். இந்த சண்டையில் யார் நாக்அவுட் ஆகி கீழே விழுகிறார்களோ, அவர்கள் தோல்வியை ஒத்துக்கொள்ள வேண்டும். என்ன பந்தயம் என்பது குறித்து போட்டி நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு அறிவிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.