தொடங்கியது வேதகிரீஸ்வரர் சித்திரை திருவிழா
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் புகழ்பெற்ற வேதகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் 1500 ஆண்டுகள் பழமையானது. அடுத்த மாதம் சித்திரை பெருவிழா என்பதால் இன்று கொண்டியேற்றம் தொடங்கப்பட்டது.
இந்த திருவிழா 11 நாட்கள் நடைபெறும், இந்த 11 நாட்களிலும் சிவபெருமான் ஒவ்வொரு கோளத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார் என கூறப்படுகிறது.
முக்கியமாக விழா தொடக்கத்தில் இருந்து 7வது நாள் சிவபெருமான் தேரில் வீதி ஊர்வலம் செல்வார். 10வது நாள் பக்கதர்களுக்கு தீர்த்தம் வழங்க்கப்படும். 11ம் நாள் மகா மகாபிஷேகம் நடைபெற்று சிவபெருமான் பக்தர்களுக்கு சிம்ம அலங்காரத்தில் காட்சி அளிப்பார்.
சித்திரை திருவிழாவிற்கான ஏற்பாடுகளை, ஒரு மாதத்திற்கு முன் இருந்தே தொடங்கிவிட்டதாக, கோவில் அலுவலர் சக்திவேல் கூறினார்.
மேலும் திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு, பாதுகாப்பு அளிக்கும் விதமாக பல ஏற்பாடுகளை செய்திருப்பதால். பக்தர்கள் அச்சமின்றி இருக்கலாம் எனவும் கூறினார்.
Discussion about this post