வைகை ஆற்றில் இறங்கிய வரதராஜ பெருமாள்..!
எமனேஸ்வரம் சவுராஷ்டிரா சபைக்கு சொந்தமான வரதராஜ பெருமாள் கோவிலின் 116வது வருட வசந்த உற்சவம் நேற்று முன் தினம் தொடங்கியது. பெருமாள் கள்ளழகர் கோலத்தில் அலங்கரிக்கப்பட்டு , நள்ளிரவு 3:00 மணியளவில் பூ பல்லக்கில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
கருப்பண்ண சுவாமி கோவிலில் கோவிந்த கோஷம் முழங்க, வரதராஜ பெருமாளுக்கு தீப ஆராதனை நடைபெற்றது. பின் அதிகாலை 5:30 மணியளவில் வைகை ஆற்றில் கள்ளழகர் கோலத்தில் இறங்கினார்.
இதனை தொடர்ந்து மஞ்சப்பட்டினம், மண்டகப்படியில் நேற்று காலை 10:00 மணிக்கு குதிரை வாகனத்தில் அலங்காரமாகி மேலச்சத்திரம் அனுமந்தூர் கோதண்ட ராமசாமி கோவில் சிறப்பு பூஜைகள் ஏற்பட்டது.
பின் அன்று மாலை 6:00 மணிக்கு வைகை ஆற்றில் இறங்கினார். பின் அலங்கரிக்கப்பட்டு குதிரை வாகனத்தில் எமனேஸ்வரம் பகுதியில் முக்கிய வீதிகளில் மட்டும் ஊர்வலம் சென்றார், பக்தர்கள் பலரும் தீப ஆராதனை செய்து வழிபட்டனர்.
தீப ஆராதனைகள் முடிந்ததும்.., வண்டியூர் மண்டபடியில் சேர்க்கையாகினார்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
Discussion about this post