வைகோவின் பம்பரம் சின்னம் வழக்கு…!! ஐகோர்ட் எடுத்த முடிவு..!! நாளை காலை 9 மணி..?
வருகின்ற மக்களவைத் தேர்தலில் மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்க கோரி கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கப்பூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது வைகோ தரப்பில் தங்கள் கோரிக்கைகளை ஏற்ற கட்சி நிர்வாகிகளின் பெயர்களை இணையதளத்தில் பதிவேற்றியுள்ளோம், மற்றும் தேர்தல் ஆணையம் பம்பரம் சின்னம் ஒதுக்கீடு செய்யவில்லை என்றும் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி நாள் என்பதால், தங்கள் கோரிக்கையை மறுபரிசீலினை செய்யும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்திரவு பிறப்பிக்குமாறு தங்கள் வாதங்களை முன் வைத்தனர்.
அதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணைய தரப்பின் வழக்கறிஞர், சட்டப்படி அங்கீகரிக்கப்படாத மற்றும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிடுவதால் ஒரே சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பதை குறித்து இன்று முடிவெடுக்கப்படும் என கூறினார்.
14 ஆண்டுகளுக்கு முன்பு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது மதிமுகவிற்கு சின்னம் ஒதுக்கீடு செய்வது குறித்து அது சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகள் முடிவு எடுப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, பம்பரம் சின்னம் பொது சின்ன பட்டியலில் உள்ளதா இல்லையா என கேள்வி எழுப்பப் பட்டது. அதற்கு பதிலளித்த தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞர், பம்பரம் சின்னம் பொதுச்சின்னம் பட்டியலிலும் இல்லை, அங்கீகரிக்கப்பட்ட பட்டியலிலும் இல்லை எனவே மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்குவது குறித்து சம்பந்தப்பட்ட தேர்தல் ஆணையர் தாராளாமாக முடிவெடுக்கலாம் எனவும் கூறினார்.
பம்பரம் சின்னம் ஒதுக்கக்கோரி மதிமுக மனு :
எனவே தங்களுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கக்கோரி மதிமுக மனு அளித்திருப்பதாகவும் அந்த மனு மீதான வழக்கு நாளை காலை ஒன்பது மணிக்குள் முடிவெடுக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க உத்தரவிட்டு விசாரணையை நாளை பிற்பகல் 2.15 மணிக்கு ஒத்திவைத்துள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..