வடபழனி முருகன் கோவில் வைகாசி தேரோட்டம்..
சென்னை வடபழனி பழனி ஆண்டவர் கோவிலில் வருடந்தோறும் வைகாசி விசாக பிரமோற்சவம் விமர்சையாக நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் வைகாசி விசாக திருவிழா மே 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது.
விழா தொடங்கிய நாளில் இருந்து தினமும் ஒரு ஒரு வாகனத்தில் வீதி உலா வந்து, மக்களுக்கு அருள் பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. வள்ளி, தெய்வானையோடு முருக பெறுமான், அலங்காரத்தில் தேரில் ஊர்வலம் வந்தார்.
ஆற்காடு 100 அடி சாலை வழியாக, காலை 11 மணிக்கு திருத்தேர் வலம் வந்தது. ஏராளமான பக்தர்கள் அதில் கலந்துக் கொண்டு தேரை இழுத்தனர். ஜூன் 2ம் தேதி மாலை 6 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெறும் எனவும் கோவில் நிர்வாகி தெரிவித்தனர்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..