உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகளை வெளியேற்றக் கோரி உக்ரைன் தாக்கல் செய்துள்ள மனு தொடர்பான தனது விசாரணையை ஐ.நா. சர்வதேச நீதிமன்றம் இன்று(மார்ச்.07) தொடங்கியுள்ளது.
கடந்த 24 ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தனது கொடூர தாக்குதலை தொடங்கியது. கடந்த 12 நாட்களுக்கு மேலாக தீவிர தாக்குதல்கள் மூலம் உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றியது.
இதற்கிடையில், ரஷியா உக்ரைன் உடனான போரை கை விட்டு பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் உக்ரைன் எல்லையில் இருக்கும் ரஷ்ய நட்பு நாடான பெலாரஸில் இரு கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
இதையடுத்து, உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகளை வெளியேற்றக் கோரி உக்ரைன் சர்வதேச நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தது. அந்த மனு மீதான விசாரணையை ஐ.நா. சர்வதேச நீதிமன்றம் இன்று(மார்ச்.07) தொடங்கியுள்ளது.
இதில் ரஷ்யா கலந்துகொள்ள மாட்டோம் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் ரஷ்யா தனது தரப்பு வாதங்களை நாளை முன்வைக்க சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.