சங்கட சதுர்த்தி விரதத்தில் பலன் கிடைக்க இப்படி செய்து பாருங்கள்..!!
சங்கட சதுர்த்தியில் விரதம் இருந்து வழிபட்டு வந்தால் பிணிகள், பில்லி சூனியம், காரியத் தடைகள், மற்றும் கடன் தொல்லை என அனைத்து பிரச்சனைகளும் நீங்கி நிம்மதியான வாழ்க்கைக்கு வழிவகுக்கிறது.
வழிபட வேண்டிய முறை :
சங்கட சதுர்த்தி அன்று விநாயகருக்கு பூஜை செய்து வழிபடுவது வழக்கம். ஆனால் நாம் வீட்டில் அவரை வழிபாடு செய்யும் பொழுது வீடும், உடலும், உள்ளமும் மிக சுத்தமாக இருக்க வேண்டும்.
பூஜை அறையை சுத்தம் செய்து, ஒரு மனையின் மேல் கோலமிட்டு, அருகம்புல்லை மனையின் மீது முழுவதும் நிரப்பி வைத்திருக்க வேண்டும். மேலும் ஒரு சந்தனம் மற்றும் குங்குமத்தால் மனை முழுவதும் சுற்றி பொட்டு வைத்திருக்க வேண்டும்.
அதன் மேல் விநாயகரை அமர வைத்து வழிபாடு செய்ய வேண்டும். பூஜையில் அமர்ந்து வெறும் தீப ஆராதனை செய்தால் மட்டும் போதாது, 21 திருநாமங்களையும் சொல்லி வழிபட வேண்டும்.
21 திருநாம மந்திரங்கள் : ஓம் பாசாங்குச தராய நம, ஓம் காணாத்யாய நம, ஓம் ஆகுவாகனாய நம, ஓம் விநாயகாய நம, ஓம் ஈச புத்ராய நம, ஓம் சர்வ ஸித்திப்ரதாய நம, ஓம் ஏக தந்தாய நம, ஓம் இலவக்த்ராய நம, ஓம் மூஷிக வாகனாய நம, ஓம் குமார குரவே நம, ஓம் கபில வர்ணாய நம, ஓம் ப்ரும்மசாரிணே நம, ஓம் மோதக ஹஸ்தாய நம, ஓம் சுர ஸ்ரேஷ்டாய நம, ஓம் கஜ நாசிகாய நம, ஓம் கபித்த பலப்ரியாய நம, ஓம் கஜமுகாய நம, ஓம் சுப்ரசன்னாய நம, ஓம் சுராஸ்ரயாய நம, ஓம் உமா புத்ராய நம, ஓம் ஸ்கந்த ப்ரியாய நம, என 21 திருநாம மந்திரங்களை சொல்லி முடித்த பின் விநாயகருக்கு தீப ஆராதனை செய்ய வேண்டும்.
பின் பிரசாதமாக அவர்க்கு வெல்லம், அவல், பொரிகடலை படைத்தது வழிபாடு செய்யலாம். இவ்வாறு செய்தால், விநாயகரின் திருவருள் முழுவதுமாக கிடைக்கும். மேலும் வீட்டில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் நீங்கி நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும். சந்தோசம் பெருகும்.
மேலும் இது போன்ற பல தெய்வீக தகவல்களை பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து இணைந்திடுங்கள்.
வெ.லோகேஸ்வரி
Discussion about this post