பட்டப்பகலில் பெண் காவலருக்கு நேர்ந்த சோகம்… கொலை முயற்ச்சியில் ஈடுப்பட்ட கணவர்…!
காஞ்சிபுரம் மாவட்டம் விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் டில்லி ராணி. இவருக்கு திருமணமாகி கணவர் மேகநாதன் மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் டில்லி ராணி இன்று காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் அருகே உள்ள பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த அவரது கணவர் மேகநாதன் இடைமறித்து, வாகனத்தை காலால் எட்டி உதைத்துள்ளார். இதனால் பெண் காவலரான டில்லி ராணிநிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.
இதையடுத்து மேகநாதன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பெண் காவலரை வெட்ட வருவதை பார்த்த டில்லி ராணி, அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
ஆனாலும் , அவரை விடமால் மேகநாதன் கொலை வெறியுடன் துரத்திக்கொண்டு ஓடியுள்ளார். பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் கத்தி கூச்சலிட்டத்தை பார்த்த மேகநாதன் அங்கு இருந்து ஓடி தலைமறைவாகியுள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவகாஞ்சி போலீசார், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த டில்லி ராணியை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய டில்லி ராணியின் கணவரை தேடி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்