பாலியல் தொழிலில் ஈடுபட சொன்ன காதலன்.. காதலி செய்த கொடூரம்..
விருதுநகர் காந்தி நகரில் வசி்த்து வருபவர் காசி விஸ்வநாதன் (27). இவர், திருப்பூரில் டிரைவராக வேலை செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் நந்தினி.
இவருக்கு திருமணமாகி கணவருடன் ஏற்ப்பட்ட கருத்து வேருப்பாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். பியூட்டி பார்லரில் வேலை செய்யும் போது நந்தினிக்கும் காசிக்கும் இடையே நட்பு மலர்ந்தது.
இந்த நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனை தொடர்ந்து இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். அதன்படி கடந்த 4 நாட்களுக்கு முன்பு முன்பு விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டிலிருக்கும் ஒரு லாட்ஜில் இருவரும் அறை எடுத்து தங்கியுள்ளனர்.
அப்போது, திடீரென வீட்டிற்கு சென்ற காசி, தன்னுடைய அம்மாவிடம் நந்தினியுடனான பழக்கம் குறித்தும், தாங்கள் லாட்ஜில் தங்கியிருப்பது குறித்தும் சொன்னதாக தெரிகிறது.
பிறகு மீண்டும் லாட்ஜூக்கு வந்த காசி, இரவு இறந்து கிடந்தார். அப்போது நந்தினி லாட்ஜில் இல்லை. இதையடுத்து, தன்னுடைய மகன் மரணத்தில் மர்மம் இருப்பதாக விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் காசியின் தாய் செல்வராணி புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் நந்தினியை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கடந்த 14ம் தேதி இருவரும் லாட்ஜில் இருந்த நிலையில் மது அருத்தினோம்.
அப்போது என்னிடம் காசி பாலியல் தொழிலில் ஈடுபடும்படி கட்டாயபடுத்தியதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
ஒருகட்டத்தில் ஆத்திரத்தை அடக்க முடியாமல் காசியின் கழுத்தை நெரித்ததுடன், தன்னிடமிருந்த ரப்பர் பேண்ட்டால், காசியின் கழுத்தை இறுக்கியதால் காசி அங்கேயே மூச்சுத்திணறி இறந்ததும் அங்கிருத்து ஓடியாத கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து போலிசார் நந்தினியை கைது செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
-பவானி கார்த்திக்