நண்பர்களுடன் ஆசையாக சூப் சாப்பிட சென்ற நபருக்கு நேர்ந்த சோகம்..!
திருவாரூர் மாவட்டம் முகந்தனூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் (49) என்பவர் பாப்பரம்பாக்கத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் தங்கி பணியாற்றி வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் பணிக்கு சென்ற அவர் பணி முடிந்ததும் தனது நண்பர்களுடன் சூப் கடைக்கு சென்றுள்ளார். அப்போது திடீரென சரவணனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு சாலையிலேயே மயங்கி விழுந்து உள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள், 108 ஆம்புலன்ஸ் மூலம் சரவணனை திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சரவணன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து மருத்துவமனைக்கு விரைந்து வந்த போலீசார் சரவணனின் உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதனைதொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, பின்னர் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.