இன்ஸ்டாகிராம் காதலனால் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம்..!
ஈரோடு மாவட்டத்தில் வசித்து வரும் ஒரு வியாபாரியின் மகள் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
21 வயதான அந்த மாணவிக்கு சமூக வலைத்தளம் மூலம் முகமது ஹர்ஷத் (23) என்ற இளையருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனால் இருவரும் செல்போனில் பேசி வந்த நிலையில் அடிக்கடி நேரில் சந்தித்து பழகி வந்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்த நிலையில் மாணவி கர்ப்பமானார்.
3 மாதங்கள் ஆன நிலையில் தன் பெற்றோரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் புதுக்கோட்டைக்கு சென்று இளையரின் பெற்றோரை சந்தித்து பேசினர்.
அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என்று கூறிய நிலையில் மாணவியின் பெற்றோர் நம்பிக்கையுடன் ஊருக்கு திரும்பினர்.
ஆனால் அவர்கள் திருமணம் செய்யாமல் தட்டி கழித்து வந்ததால் மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் முகமது ஹர்ஷத், மற்றும் அவருடைய தந்தை உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து இவர்களை விசாரணைக்கு அழைத்த நிலையில் 4 பேரும் தலைமறைவாகியதால் போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்