தங்கம் விலை இரண்டு நாட்களில் மட்டும் சவரனுக்கு 1,080 ரூபாய் உயர்ந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இன்று (மே 4) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 44 ரூபாய் அதிகரித்து 5,750 ரூபாயாகவும், சவரனுக்கு 352 ரூபாய் அதிகரித்து 46,000 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
அதேபோல் 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராமுக்கு 44 ரூபாய் அதிகரித்து 6,212 ரூபாயாகவும், சவரனுக்கு 352 ரூபாய் அதிகரித்து 49,696 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
தங்கத்தை போலவே இன்று வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. வெள்ளி விலை கிராமிற்கு ஒரு ரூபாய் அதிகரித்து 82 ரூபாய் 80 காசுகளுக்கும், கிலோவிற்கு 1000 ரூபாய் அதிகரித்து 82 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
அமெரிக்க ஃபெடரல் வங்கி 0.25 சதவீதம் வட்டி விகிதத்தை உயர்த்தியதை அடுத்து மீண்டும் பொருளாதார மந்த நிலை ஏற்படக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. எனவே முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் மீது திரும்பியுள்ளது விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது.
Discussion about this post