Thursday, July 10, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

திருவண்ணாமலை  அம்மணி அம்மாள் கோபுர  ரகசியம்…!!  நோய்கள் தீர  இதை  செய்ய  மறக்காதீங்க…!! 

அவர் ஈசனோடு கலந்து 150 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும், இன்றும் இவரின் சமாதியில் கொடுக்கப்படும் விபூதிப் பிரசாதம் நோய்களை தீர்க்கிறது.

by logeshwari
November 17, 2024

திருவண்ணாமலை  அம்மணி அம்மாள் கோபுர  ரகசியம்…!!  நோய்கள் தீர  இதை  செய்ய  மறக்காதீங்க…!! 

 

 

 

இந்த  ஆன்மீக  கதையானது  கற்பனையல்ல  உண்மை.,  பலநூறு  ஆண்டுகளுக்கு  முன்  நடந்த  ஒரு  உண்மை  கதை….

திருவண்ணாமலை மாவட்டம் சென்னை  சமுத்திரத்தில் அந்தத் தெருவின் வழியாகப் போகிறவர்கள், அந்த வீட்டை பார்த்து வியக்காமல் போக முடியாது.

ஒரு  சாதாரண விவசாயக் குடும்பத்தை  சேர்ந்த  இந்த  ஏழையின்  வீட்டில்  எப்போதும்  ஆன்மீக  மணமும்,   “ஓம் நமச்சிவாய” என்ற  மந்திரமும்  ஒலித்துக் கொண்டே  இருக்கும்.,  அங்கு   செல்லும்  போதே   மெய்சிலிர்க்க  வைக்கும்  என  சொல்லலாம்

சரி   என்று  உள்ளே  சென்று  பார்த்த போது, ஒரு  பெண்  கண்மூடி தியானத்தில் அமர்ந்திருந்தாள்,  அவள்  பெயர் அருள்மொழி

இவள் வயது பெண்களெல்லாம், தோழிப் பெண்களோடு விளையாடிக் கொண்டும், காட்டில் வேலை  செய்து  கொண்டும்  இருக்கிறார்கள். இவள்  மட்டும்  எப்போதும்   “ஒம்  நமச்சிவாயா”  என்று  இருக்கிறாளே   என அவரது  வீட்டில்  உள்ளவர்களே  ஆச்சரியமாக  பார்த்தனர்.

அரைமணிநேரம் கழித்து தீபாரதனை செய்து விட்டு சாப்பிட வந்தாள் அருள்மொழி. சாப்பிடும் முன்பும் கூட, தியானம் செய்து விட்டு சாப்பிடும் பெண்ணைப் பார்த்து பயந்தே போனாள், அந்த  பெண்ணின்  அம்மாள் பட்டு.

கணவர் கோபால் பிள்ளை, வீடு வந்தவுடன், “எதாவது செய்யுங்க. சாமி கும்பிட வேண்டியது தான். அதுக்காக இப்படியா..?  எந்நேரமும் பூஜையறையே கதின்னு கிடக்கிறா” என்று ஆதங்கப்பட்டார்  பட்டம்மாள்.

மனைவியின்  புலம்பலைக்  கேட்ட  கோபால்  பிள்ளை, “சரி பட்டு. உன்னோட  அண்ணன் பையனுக்கோ,  இல்லை எங்க அக்கா பையனுக்கோ  கல்யாணம்  செய்து வைத்தா  எல்லாமே  சரியாயிடும்   எனக் கூறியுள்ளார்..

வாசலில் தொங்கிய மாவிலைத் தோரணமும், சமையலறையில் காலையிலேயே வீசிய பலகார வாசனையுமாக, அன்று வீடே களை கட்டி இருந்தது.

“என்னம்மா விசேஷம்?” என்றாள் அருள்மொழி.  “இன்னைக்கு மாமா  வீட்டில் இருந்து உன்னை  பெண் பார்த்து  நிச்சயம்  செய்ய  வராங்க., சீக்கிரம்  போயி  ரெடியாகு  என்  சொல்கிறார்  தாய் பட்டம்மாள்..

இதை  கேட்டு  அருள்மொழி  அதிர்ச்சி   அடைந்தாள்..  என்ன செய்வது..? என்று தெரியாமல் திகைத்தாள்  அருள்மொழி. நிச்சயம்  செய்து  விட்டால்  அடுத்து  கல்யாணம் செய்து வைத்துவிடுவார்களே   என்ற அச்சத்தில்  விறுவிறுவென்று  வேகமாக  சென்று  “சிவாயநம.. சிவாயநம”  என்று ஜெபித்தபடி நடந்தவர், தன்னுணர்வு பெற்றுப் பார்த்த போது கோமுட்டிக்குளம் என்ற நீர்த் தடாகத்தின் முன் நிற்பதைக் கண்டாள்.

“அருணை ஈஸ்வரா.. உன் கருணையே.. கருணை..” என்றபடி, அந்தக் குளத்தில் குதித்து விட்டாள், அருள்மொழி.

குளத்தைச் சுற்றி இருந்த வயல்வெளியில் வேலைசெய்து கொண்டிருந்தவர்கள், அவள் விழுந்ததைப் பார்த்து ஓடிவந்தனர். குளத்தில் குதித்துத் தேடிப் பார்த்தனர். எங்கு தேடியும் அவள் கிடைக்கவில்லை.

ஆயி அம்மைக்கும், கோபால் பிள்ளைக்கும் அழுதழுது கண்ணீர் வற்றி விட்டது. எல்லோரும் எவ்வளவோ சொல்லியும் குளக் கரையை விட்டு நகர மாட்டேன் என்று அங்கேயே தவம் இருந்தார்கள். குளத்தில் எதாவது சின்னச் சலனமாவது தெரி கிறதா? என்று பார்த்துக் கொண்டே இருந்தார்கள். ஆனால் குளம் மவுனமாகவே இருந்தது.

மூன்றாவது நாள் குளம் திடீரென சல சலத்தது. தாயும், தந்தையும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பார்த்தார்கள். அங்கே அன்று மலர்ந்த மலர்போல் உயிருடன் வந்தாள், அருள்மொழி.

விஷயம் கேள்விப்பட்டு கூடிய கூட்டத்தினருக்கு, அருள்மொழி அங்கிருந்த குளக்கரை மண்ணை எடுத்து கொடுக்க, அது அருணாசலேஸ்வரர் அவல், பொரி பிரசாதமாக மாறியது.

தனக்கு சிவபெருமானே குருவாக இருந்து யோக நிலையைக் கற்றுத் தந்ததாகவும், தான் ஒரு பெண் சித்தராக மாறி விட்டதாகவும் கூறிய அருள்மொழி, தன் பெயர்  “அம்மணி அம்மாள்” என்றும் சொன்னார்.

அதன்  பின்னர்  அவர்கள்  திருவண்ணாமலை  அண்ணாமலையார்  கோவிலுக்கு  சென்றனர்..  அண்ணாமலையானை  தரிசித்து  “பக்தர் களுக்கு தொண்டு செய்வதே மகேசனைத் திருப்திப்படுத்தும்”  என்று  எண்ணி   அன்றைய  நாளிலிருந்து  இன்று  வரை  கோவிலுக்கு  வரும்  அனைத்து   பக்தர்களுக்கும்,  கிரிவலம் செய்பவர்களுக்கும் தொண்டாற்றத் தொடங்கினார்.

திருவண்ணாமலைக் கோவிலை  அப்போது  கட்டும்  பணி  நடந்தது.,  அனைத்து  திசை  கோபுரங்களும் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், வடக்கு கோபுரம் மட்டும் கட்டப்படமால் இருந்தது.,  அதன்  பணியை  யார்  தொடங்கினாலும்  தடங்கல் வந்து கொண்டிருந்தது..

ஒருநாள் இரவு அம்மணி அம்மாள் கனவில் வந்த ஈசன், “வடக்கு கோபுரத்தைக் கட்டுவதே உன் பணி” என்று சொல்லி மறைந்தார்.  அன்றில் இருந்து உயிர் மூச்சாக அந்தப் பணியைத் தொடங்கினாள்.  அவள் ஆற்றலை அறிந்த வணிகர்கள், பண உதவி செய்தனர். ஒரே ஒருவர் மட்டும் பணத்தை வைத்துக் கொண்டே இல்லை என்று கூறிவிட்டார்.

அப்போது அம்மணி அம்மாள், அவரது சட்டைப் பையில் இருந்த பணத்தின் அளவை சரியாகச் சொல்ல, வீட்டுக்குச் சென்றதும் எண்ணிப்பார்த்த வணிகருக்கு பெரிய அதிர்ச்சி. அம்மணி அம்மாள் கூறிய தொகை, ஒரு ரூபாய் கூட அதிகமாகவோ குறைவாகவோ இல்லாமல், மிகச்சரியாக இருந்தது. அந்தச் செல்வந்தர், உடனடியாக மனம் மாறி, இருமடங்கு பொருளுதவி செய்தார்.

இவ்வாறு பலரும் பொருளுதவி செய்ய, கோபுரம் ஒவ்வொரு நிலையாகக் கட்டி முடிக்கப்பட்டு, ஐந்து நிலைகள் வரை வந்துவிட்டது.   எல்லாப் பணமும் தீர்ந்து விட்டாலும், இனி யாரைக் கேட்பது என்று சோர்வடையாமல், மைசூர் மகாராஜாவிடம் சென்றாள், அம்மணி அம்மாள்.

இவரின் எளிய தோற்றம் கண்டு, தடுத்து நிறுத்திய காவலன் “யார் நீ?” என்றான்.

“மகாராஜாவிடம் உதவி கேட்டு வந்திருக்கிறேன் அப்பா”  என  சொல்கிறார்.

“சரி பார்க்கலாம்.. அப்படிப் போய் உட்காரு..”

சொன்னபடியே ஓரமாகப் போய் உட்கார்ந்து விட்டார் அம்மணி அம்மாள்.

ஆனால் தனது “லகிமா” சக்தியால், அரண்மனைக்குள் தர்பார் மண்டபத்திற்குள் நுழைந்து, மகாராஜா முன்னால் போய் நின்றார்.

உரிய அனுமதி இல்லாமல் தன் முன் வந்து நின்ற பெண்ணைப் பார்த்த அரசர் ஆச்சரியம் அடைந்து, “யார் நீங்கள்?” என்றார்.

“என் பெயர் அம்மணி. திருவண்ணாமலை வடக்கு கோபுரம் கட்ட பொருளுதவி கேட்டு வந்தேன். காவல்காரன் உள்ளே விட மறுத்ததால், லகிமா சக்தியைப் பயன்படுத்தி உள்ளே வந்தேன்.”

“என்ன இது.. என்னால் நம்ப முடியவில்லையே?. யாரங்கே காவல்காரனை அழைத்து வா”

மன்னனின் கட்டளைப்படி அரண்மனைக் காவலன் உள்ளே வரவழைக்கப்பட்டான். அப்போது அவன், தான் வெளியே நிறுத்தி வைத்த பெண்மணி, உள்ளே இருப்பதைக் கண்டு ஆச்சரியம் கொண்டான். “நீ எப்போது உள்ளே வந்தாய்.. வெளியே அல்லவா அமர்ந்திருந்தாய்?”

மகாராஜா குழம்பிப் போய் அம்மணி அம்மாளையும் உடன் அழைத்துக் கொண்டு வெளியே போய்ப் பார்க்க, அங்கே அம்மணி அம்மாள் அமர்ந்து இருந்தார்.  அவரது சக்தியைக் கண்டு வியந்து, அவருக்கு உரிய மரியாதைகள் செய்து பட்டுப்புடவை பரிசளித்து குதிரைகளில் பொன்னும் பொருளும் அனுப்பி வைத்தார்.

அதைக்கொண்டு ஆறு மற்றும் ஏழாம் நிலைகளைக் கட்டி முடித்தார். மீண்டும் பொருள் தீர்ந்து விடவே, “நீயே கதி.. நீயே சரணம் நமசிவாய” என்று தவத்தில் ஆழ்ந்து விட்டார்.  தவத்தில் காட்சி அளித்த இறைவன், “பொருள் தேவைப்படும் இடங்களில் எல்லாம், வேண்டிய அளவு திருநீற்றைக் கொடு. அது பொன்னாக, கூலிப்பணமாக மாறி விடும்” என்றார்.

அம்மணி அம்மாளும் அதன்படியே செய்ய பதினொரு நிலைகள் கட்டி முடிக்கப்பட்டன.  இவரது இறை ஆற்றலையும், விடாமுயற்சியும் கண்டு அப்போதைய ஆங்கிலேய அரசு வாய் பிளந்தது.

மேற்கு மற்றும் தெற்கு கோபுரங்களை விட உயரமாகவும், கிழக்கில் உள்ள ராஜகோபுரத்திற்கு இணையாகவும்   இருந்த கோபுரம் பதிமூன்று கலசங்களைக் கொண்டு கட்டி முடிக்கப்பட்டது. கோபுரத்தைக் கட்டி முடித்து, ஈசன் அருளால் தானே முன்னின்று கோபுர கும்பாபிஷேகத்தையும் செய்து வைத்தார், அம்மணி அம்மாள்.

அவர் கட்டியமைத்த கோபுரம், இன்றளவும் ”அம்மணி அம்மாள் கோபுரம்” என்றே அழைக்கப்படுகிறது.  தன் யோக சக்தியால் திருநீற்றின் மூலம், பல்லாயிரம் கணக்கானவர்களின் நோய் தீர்த்த அம்மணி அம்மாள், தனது ஐம்பதாவது வயதில் தைப்பூச தினத்தன்று ஈசனோடு கலந்தார்.

இவரது ஜீவ சமாதி திருவண்ணாமலை கிரிவலப் பாதையில், எட்டாவது லிங்கமான ஈசான்ய லிங்கத்திற்கு எதிரில் அமைந்துள்ளது.   1735 ஆம் ஆண்டு மார்கழித் திங்கள் ஆயி அம்மாள், கோபால் பிள்ளை தம்பதிக்கு மார்கழி மாதம் அவிட்ட நட்சத்திரத்தில் அவதரித்தவர் அம்மணி அம்மாள். அவர் சிவனையே குருவாகக் கொண்டு ஐம்பது ஆண்டுகள் இறை தொண்டு செய்து, 1875 ஆம் ஆண்டு சிவலோகப் பதவி அடைந்தார்.

அவர் ஈசனோடு கலந்து 150 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும், இன்றும் இவரின் சமாதியில் கொடுக்கப்படும் விபூதிப் பிரசாதம் நோய்களை தீர்க்கிறது.  என்பது  ஐதீக  உண்மை…

Tags: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில்திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர்திருவண்ணாமலை கிரிவலப்பாதைதிருவண்ணாமலை கிரிவலம்திருவண்ணாமலை கோவில் வரலாறு
ADVERTISEMENT

Related Posts

ஆன்மிகம்

மலர் சூட்டும் மணவாளன் இவன் தானா..! “சுந்தரேசுவரரை கரம் பிடித்தார்  மீனாட்சி அம்மன்..”

ஆன்மிகம்

“கண்ணுடைய  நாயகி  அம்மன்” ஆயிரம் கண்ணுடையாள்..!  கண்ணாத்தாள் வரலாறு…!!  

ஆன்மிகம்

12 வயதில் வந்த காதல்… போப் பிரான்சிஸ் பாதிரியார் ஆன பின்னணி?

Next Post

12 மாவட்டங்களுக்கு  கனமழை  எச்சரிக்கை...!!  

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.