திருப்பத்தூர் பூமாரி அம்மனுக்கு – பக்தர்கள் தீச்சட்டி எடுத்து வழிபாடு..!!
திருப்பத்தூர் பூமாரி அம்மன் கோயிலில் வருடம் தோறும் பூச்சொரிதல் விழா நடைபெறும். இந்த ஆண்டும் நேற்று காலை விழா தொடங்கியது. மூலவர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது, பூஜையை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் அனைவரும் தரிசனம் செய்து சென்றனர்.
பின் ஆயிரம் கணக்கான பக்தர்கள் தீச்சட்டி, பால்குடம் முளைப்பாரி ஏந்தி கோயிலை சுற்றி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதனை தொடர்ந்து நடை சாற்றாமல் இரவும் பகலும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் அபிஷேகமும் செய்யப்பட்டன, பக்தர்களை மகிழ்வீக்கும் விதமாக இசை, நடனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.
பின் சிம்ம வாகனத்தில் அம்மன் முக்கிய தெருக்களில் மட்டும் வீதி உலா சென்றார். இந்த திருவிழா இன்னும் 10 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறுமாம்.
-வெ.லோகேஸ்வரி