சென்னை குளமாக மாறிய காலம் மாறிவிட்டது..!! அமைச்சர் கே.என்.நேரு பேட்டி..!!
தேங்கும் மழைநீரை ஒருமணி நேரத்தில் அகற்றுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, சென்னையில் தேங்கியிருந்த மழை நீர் அனைத்து ஒருமணி நேரத்தில் வடிந்துவிட்டதாகவும், மழைநீர் வடிகால் பணிகள் 98 சதவீதம் நிறைவடைந்துவிட்டது என்றும், இரண்டு சதவீதம் மட்டுமே மீதம் உள்ளதாக தெரிவித்தார்.
சென்னையில் மிக கனமழை பெய்தாலும், அதனை எதிர்கொள்ள தயாராக உள்ளதாக தெரிவித்த அவர், மரம் சாய்ந்து விழுந்தாலோ, மழை நீர் தேங்கினாலோ, அதனை அப்புறப்படுத்துவற்கு பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார்.
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..