திருவாரூர் விசக நிர்வாகிகள்..!! முக்கிய தலைவர் சிலைக்கு மாலை..!!
திருவாரூர் விடுதலை சிறுத்தைகள் கட்சி புதிய நிர்வாகிகள் முக்கிய தலைவர்கள் சிலைகளுக்கு பெருந்திரளானோர் பேரணியாக சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் மூன்று மாவட்ட செயலாளர்களாக புதிதாக அறிவிக்கப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு திருவாரூர் மைய மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச் செல்வன் தலைமையில் டாக்டர் அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் பேரணியாக சென்று பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் பேரணையானது திருவாரூர் கடைவீதி வழியாக சென்று திமுக நகர அலுவலகம் அருகில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் கர்ம வீரர் காமராஜர் திருவுருவ சிலைகளுக்கு பெருந்திரளாக சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் .
இந்த நிகழ்ச்சியில் மண்டல செயளாலர் அறிவழகன், மண்டல துணை செயலாளர் ரமணி, தெற்கு மாவட்ட செயலாளர் வெற்றி , வடக்கு மாவட்ட செயலாளர் தமிழ்ஓவியா, முன்னாள் மாவட்ட செயலாளர் வடிவழகன் உள்ளிட்ட மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய கிளை நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.