மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்துப் பேசினார்.
சமீபத்தில் சோசியல் மீடியாவில் திருமாவளவன் அளித்த பேட்டி ஒன்று தாறுமாறு வைரலாகி விசிக, மதிமுக தொண்டர்களிடையே பெரும் விவாதத்தை கிளப்பியது. தமிழகத்தில் உள்ள தலைவர்கள் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அரசியல் செய்தனர் என்று விமர்சித்து இருந்தார். இது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதனால் இரு கட்சியினரும் கருத்து மோதலில் இறங்கியனர்.
இந்த விவகாரத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் நெறியாளர், ம.தி.மு.க தலைவர் வைகோ பெயரைக் குறிப்பிட்டுக் கேட்டபோது, அதைக் கடந்துபோனது வருத்தமளிக்கிறது’ என ம.தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் தி.மு.ராசேந்திரன் அறிக்கை வெளியிட்டிருந்தார். கடந்த இரு சில நாட்களாக இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ள இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக திருமாவளவன் – வைகோவை நேரில் சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை அவரது இல்லத்தில் திருமாவளவன் நேற்று சந்தித்தார்.
பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய திருமாவளவன்: இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மிகப்பெரிய பங்களிப்பு அளித்தவர் வைகோ என்பதை நாடு அறியும். அதற்காக அவர் சந்தித்த அரசியல் பின்னடைவு, சிறைக் கொடுமைகள், அவரது குடும்பமே சந்தித்த பாதிப்புகள் ஏராளம்.
விடுதலைப் புலிகள் குறித்து வைகோ உரையாற்றினால், இளைஞர் பட்டாளம் திரண்டு வரும் என்பது வரலாற்று உண்மை. இந்நிலையில், அண்மையில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், வைகோ பெயரைக் குறிப்பிட்டு குதர்க்கமான கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளிக்காமல் கடந்து சென்றேன். அது தவறானப் புரிதலுக்கு இடம் தந்தது. இதற்காக வைகோ வருத்தப்படக் கூடாது என்பதற்காக, அவரிடம் நேரில் பேச விரும்பினேன். மேலும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலை, இலங்கைத் தமிழர் பிரச்சினை என பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினோம். இந்த சந்திப்பு மன நிறைவாக இருந்தது எனத் தெரிவித்தார்.
Discussion about this post