காதலிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன முன்னால் காதலன்.. குத்தி கொன்ற 2வது காதலன்..!
ஈரோடு மாவட்டம் பவானி திருவள்ளூர் நகர் பகுதியில் துரைசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் சேது மணிகண்டன் (23) நாற்காலி தயாரிக்கும் நிறுவனத்தில் வெல்டராக வேலை செய்து வந்துள்ளார்.
அதே பகுதியில் வசிக்கும் இவரது நெருங்கிய நண்பரான குகநாதன் தள்ளு வண்டி கடையில் களான் விற்ப்பனை செய்யும் வேலை செய்து வருகிறார்.
இதில் சேது மணிகண்டன் தனது வீட்டிற்கு அருகில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வசித்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளனர்.
இருவரும் காதலித்து வந்த நிலையில் திடீரென அந்தப் பெண் சேது மணிகண்டனை விட்டுவிட்டு குகநாதனை காதலித்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த பெண்ணின் பிறந்தநாளை முன்னிட்டு சேது மணிகண்டன் தன்னுடைய செல்போனில் அவருடைய புகைப்படத்தை வாட்ஸ் அப் ஸ்டேட்டஸாக வைத்து வாழ்த்தியுள்ளார்.
அதனைப் போலவே குகநாதனும் அந்த பெண்ணின் புகைப்படத்தை ஸ்டேட்டஸ் வைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதை பார்த்த சேது மணிகண்டன் செல்போனில் குகநாதனை கண்டித்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து அன்றிரவு பவானி அரசு மருத்துவமனை அருகே சேது மணிகண்டன் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த குகநாதன் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றிய நிலையில் குகநாதன் திடீரென தான் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சேது மணிகண்டனின் மார்பு மற்றும் வயிற்று பகுதியில் சரமாரியாக குத்தியுள்ளார்.
இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த சேது மணிகண்டனை அக்கம் பக்கத்தினர் பவானி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பின்னர் இந்த கொலை சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்