கணவன் திட்டியதால் கள்ளக்காதலை துண்டித்த மனைவி.. காதலி பேசாத விரக்தியில் காதலன் செய்த கொடுரம்..!
விருதுநகர் மாவட்டம் அல்லிக்குளம் கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் பீமராஜ்-நாகலட்சுமி இவருக்களுக்கு திருமணமாகி 4 வருடங்கள் ஆன நிலையில் இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இந்தநிலையில் நாகலட்சுமி அவரது நெருங்கிய உறவினரான ராஜபாண்டி (26) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர்.
இதனை அறிந்த பீமராஜ் தனது மனைவியை கண்டித்துள்ளார். இதனால் நாகலட்சுமி அவருடன் போனில் பேசுவதை நிறுத்தியதால் ஆத்திரமடைந்த ராஜபாண்டி, நாகலட்சுமியிடம் தகறாரில் ஈடுப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து, நேற்று முன்தினம் நாகலட்சுமி தனது மகன் மற்றும் உறவினரான பிரியதர்ஷினி ஆகியோருடன் வெளியே சென்றதை அறிந்த ராஜபாண்டி மூன்று பேரையும் வழுக்கட்டாயமாக தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார்.
இவர்கள் சிறிது தூரம் சென்ற நிலையில் மோட்டார் சைக்கிளை நிறுத்திய ராஜபாண்டி பிரியதர்ஷினி மற்றும் குழந்தையை இறக்கி விட்டு நாகலட்சுமியை மட்டும் காட்டுப்பகுதிக்குள் தனியாக அழைத்து சென்றுள்ளார்.
அவரை பிந்தொடர்த பிரியதர்ஷினி ராஜபாண்டி மட்டும் தனியாக வந்ததை கண்டு நாகலட்சுமியை தேடியுள்ளார். அப்போது கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் நாகலட்சுமி சடலமாக இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக காரியாபட்டி காவல்துறையினருக்கு தகவல் அளித்தார்.
தலவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நாகலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து ராஜபாண்டியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்