திருவண்ணாமலையில் கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை
திருவண்ணாமலையில் கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டிலுள்ள புனித தூய லூர்து அன்னை கத்தோலிக் ககிறிஸ்துவ தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
தேவாலயம் முழுக்க வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, ஏசுபிரான் பிறப்பு நேர்த்தியாக சித்தரிக்கப்பட்ட இயேசுவின் சொரூபம் கிறிஸ்துமஸ் குடிலில் வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் கலந்து கொண்டு ஒருவருக்கு ஒருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.
பங்குத்தந்தை விக்டர் இன்பராஜ், உதவி பங்கு தந்தையர்கள் சதீஷ்ராஜ், ஸ்டீபன் ஆகியோர் இந்த சிறப்பு திருப்பலியை நடத்தினர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.