விசாரணை அமைப்பை தவறாக பயன்படுத்தும் ஒன்றிய அரசு..! ராகுல் காந்தி தலைமையில் எதிர்கட்சிகள்..!
விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதாக கூறி எதிர்க்கட்சிகள் முழக்கத்தில் ஈடுபட்டனர். 3-வது முறையாக பதவியேற்றுள்ள பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த 24-ந் தேதி தொடங்கியது.
இதில் 27-ந் தேதி நடந்த இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். அதை தொடர்ந்து மறுநாளே குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்குவதாக இருந்தது.
ஆனால் நீட் தேர்வு முறைகேடு குறித்து முதலில் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கின. இது தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசும் அளித்து இருந்தன.
எனினும் மாநிலங்களவையில் குடியரசு தலைவர் உரை மீதான விவாதம் தொடங்கியது. பா.ஜனதா எம்.பி. சுதான்ஷு திரிவேதி இந்த விவாதத்தை தொடங்கி வைத்து பேசினார். பின்னர் பா.ஜனதா எம்.பி. கவிதா பதிதார் மற்றும் 9 உறுப்பினர்கள் பேசினர்.
#WATCH | Delhi: Opposition MPs, including Lok Sabha LoP and Congress MP Rahul Gandhi, protest at the Parliament complex alleging the misuse of central agencies. pic.twitter.com/MlW1jZ2zSX
— ANI (@ANI) July 1, 2024
இந்த நிலையில் குடியரசு தலைவர் உரை மீதான விவாதம் இன்று மீண்டும் இரு அவைகளிலும் தொடங்குகிறது. இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதாக கூறி முழக்கத்தில் ஈடுபட்டனர். மக்களவை, மாநிலங்களவை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கலந்து கொண்டனர்.
மேலும் அரசியல் ஆதாயத்துக்காக சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டி உள்ளனர். முன்னதாக, நீட் தேர்வு முறைகேடு மற்றும் புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமலுக்கு வந்தது குறித்து விவாதிக்க கோரி நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது. இதனால் இன்றைய கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெறுமா..? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதையும் படிங்க :
மாநில கல்விக் கொள்கை அறிக்கையில் அதிரடி..! முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்த அறிக்கைகள்..!
– லோகேஸ்வரி.வெ