எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியின் மூன்றாவது ஆலோசனை கூட்டம் மும்பையில் இன்று தொடங்குகிறது.
மக்களவை தேர்தலை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கின. இதன் முதல் கூட்டம் பிஹார் தலைநகர் பாட்னாவில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. இரண்டாவது கூட்டம் பெங்களூரில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது.
இந்நிலையில், இந்தியா கூட்டணியின் 3-வது கூட்டம் மும்பையில் இன்று தொடங்குகிறது. இதில் கூட்டணிக்கான இலச்சினை (லோகோ) வெளியிடப்படுகிறது. தொகுதி பங்கீடு குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இக்கூட்டணியில் காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், ஷிவ் சேனா, தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட முக்கிய எதிட்கட்சிகளோடு 26 கட்சிகள் இந்தக் கூட்டத்திக் பங்கேற்க உள்ளனர். இதற்காக தமிழக முதல்வரும் இன்று மும்பை புறப்பட்டு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.