”மாமியாரை கொலை செய்த மருமகன்”..விசாரணையில் வெளிவந்த உண்மை..!
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த லதா (40) என்பவருடைய மகள் சௌமியா. இவருக்கும் விவேக் என்ற நபருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் கணவன் மனைவிஇருவருக்குள் நடந்த பிரச்சனையால் சௌமியா தனது தாய் லதா வீட்டிற்கு வந்துள்ளார்.
வந்த இடத்தில் அவருக்கு வேறு ஒரு நபருடன் கள்ளத்தொடர்புஏற்பட்டள்ளது. இதனை அறிந்த லதா அதனை கண்டு கொள்ளாமல் இருந்துள்ளார்.
இது குறித்து விஷயம் தெரிந்த விவேக் நியாயம் கேட்க மாமியார் லதா வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது சௌமியா வீட்டில் இல்லாததும் கள்ளக்காதலனுடன் ஊர் சுற்றச் சென்றதை அறிந்த விவேக் ஆத்திரத்தில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாமியார் லதாவின் கழுத்தில் குத்தி கொலை செய்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விவேக் கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-பவானிகார்த்திக்