செங்கோல் சேர வேண்டிய இடத்தில் சேர்ந்து விட்டது.. மோடியை பாராட்டும் இளையராஜா..!
புது டெல்லியில் உள்ள, புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை அன்று திறந்து வைத்தார். அதன் பின் லோக் சபா அறையில் வரலாற்று செங்கோலை நிறுவினார்.
புதியக் கட்டிடத்தில் செங்கோலை நிறுவுவதற்காக தமிழகத்தை சேர்ந்த பல கோவில்களில் இருந்து ஆதினர்களுடன் நடந்து சென்று. சபா நாயக்கர் பிர்லாவுடன், பிரதமர் மோடி செங்கோலை நிறுவினார்.
“செங்கோலை” நிறுவி பாராளுமன்றம் நாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒன்று என பேசினார்.
இந்த பாராளுமன்றம் 970 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.
இதற்கு இசையமைப்பாளரும், ராஜ்சபா நியமன எம்.பி.யும் ஆன இளையாராஜா செங்கோல் சரியான இடத்திற்கு வந்து சேர்ந்துவிட்டது. அது எனக்கு பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது எனக் கூறியுள்ளார்.
Discussion about this post