ஆட்டோ ஓட்டுநரின் செயலை வெகுவாக பாரட்டிய போலீசார்..!
மாதவரத்தை சேர்ந்த தீபா என்பவர் தனது 5 சவரன் பழைய நகையை மாற்றி புதிய நகை வாங்குவதற்காக தனது கணவருடன் சௌகார்பேட்டை செல்ல முடிவு செய்துள்ளார். அதற்காக ராபிடோ ஆட்டோவை புக் செய்த அவர்கள் சௌகார்பேட்டை சென்றுள்ளனர்.
பின்னர் அங்கு இறங்கியபோது ஆட்டோவில் இருந்த நகை பையை எடுக்க மறந்துள்ளனர். நகை கடைக்கு சென்றதும் பை இல்லததை கண்டு அதிர்ச்சி அடைந்த தம்பதியினர் உடனே இதுகுறித்து யானைகவுனி காவல்நிலயத்தில் தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் ராபிடோ வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தொடர்பு கொண்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் புழலை சேர்ந்த பெஞ்சமின் (41)என்பது தெரிய வந்தது. இதனைதொடர்ந்து அவரது செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட போலீசார் நடந்ததை கூறியுள்ளனர்.
இதனை கேட்ட உடனே பெஞ்சமின் ஆட்டோவில தேடி பார்த்தபோது நகை பை இருந்துள்ளது. பின்னர் அதனை கொண்டு வந்து யானைகவுனி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். நகை சரி பார்த்த போலீசார் ஆட்டோ ஒட்டுநரான பெஞ்சமினை வெகுவாக பாரட்டியுள்ளனர்.
-பவானி கார்த்திக்