மதுபோதை நபரால் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..! பரபரப்பான செம்மஞ்சேரி..!
சென்னை செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியில் வசித்து வந்த கணவனை இழந்த 55 வயது மதிக்கத்தக்க பெண்மணி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அதே பகுதியில் ஏழாவது அவென்யூவில் வசித்து வந்த 45 வயதான பாலு என்கின்ற நபருக்கு திருமணமாகி மனைவி மகள் மகன் ஆகியோர் உள்ளனர்.
இந்த நிலையில் கணவனை இழந்து தனியாக இருந்த பெண்மணி வீட்டிற்குள் புகுந்த பாலு வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பெண்மணியின் அனுமதியின்றி வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அந்த பெண்மணியை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் கிளாட்சன் ஜோஸிடம் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றம் சாட்டப்பட்ட பாலுவை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தபோது தனியாக வீட்டில் இருந்த பெண்மணியை வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்தது உண்மை என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்ததாக தெரிவித்தனர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் மது போதையில் வீடு புகுந்து கணவன் இழந்து தனியாக வசித்து வரும் பெண்மணியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது என போலீசார் தெரிவித்தனர்.
பின்னர் பாலு மீது மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த செம்மஞ்சேரி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கணவனை இழந்த பெண்மணி வீட்டில் தனியாக இருந்தபோது அத்துமீறி உள்ளே நுழைந்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்புயும், அச்சத்தையும் ஏற்படுத்தியது.