செல்போன் டவர் மூலம் 15 லட்சம் ரூபாயை கொள்ளை அடித்த மர்ம கும்பல் சிக்கியது..!
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளான கோனேரி குப்பம், உடையமுத்தூர், பொம்மிகுப்பம், தண்ணீர் பந்தல், மாடப்பள்ளி உள்ளிட்ட கிராமத்தில் தனியார் செல்போன் டவர் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக செல்போன் டவர் கட்டுப்பாட்டு அறையில் இருந்த பேட்டரிகள் மற்றும் உதிரிபாகங்கள் திருடு போய்க்கொண்டிருந்தது இதுகுறித்து திருப்பத்துார் கிராமிய காவல் நிலையத்தில் டவரை நிர்வாகிக்கும் நிர்வாகிகள் புகார் அளித்திருந்தனர்..
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்..
இந்நிலையில் திருப்பத்தூர் கிராமிய போலீசார் வெங்களாபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் அப்போது அவ்வழியாக வந்த சந்தேகத்துக்குரிய நபரை நிறுத்தி விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்..
பின்னர் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்ட போது நாட்றம்பள்ளி பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் மகன் சந்திரசேகரன் (34) என்பதும்.
இவர் திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து செல்போன் டவர்களில் உள்ள உதறி பாகங்களை திருடி உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த மோசின் மகன் தானிஷ்(34) என்பவரிடம் விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.
இதன் காரணமாக சந்திரசேகரன் மற்றும் தானிஷ் திருப்பத்தூர் கிராமிய போலீசார் கைது செய்தனர்.. மேலும் இவர்களிடம் இருந்து 15 லட்சம் மதிப்பிலான பேட்டரிகள் மற்றும் RRU எனப்படும் உதிரிபாகங்களை பறிமுதல் செய்தனர்…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..