திருச்செந்தூரில் கோவிலில் நடந்த அதிசயம்..!! ஊரும் உறவும்-6
நம் வாழ்வில் சில நிகழ்வுகள் நம் கண் முன்னே நடந்ததை போல இருக்கும், சில நிகழ்வுகள் இது ஏன் நடந்தது என்று இருக்கும், ஆனால் ஒரு சில நிகழ்வுகள் மட்டும் தான் எப்படி இது நடந்தது என்று நம்மை ஆச்சரிய பட வைக்கும். அப்படி நான் நேரில் கண்ட நிகழ்வு தான் இது
சில நாட்களுக்கு முன்பு திருச்செந்தூர் கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக குடும்பத்துடன் சென்றிருந்தேன், நீண்ட நேரம் வரிசையில் நின்று முருகனை தரிசனம் செய்துவிட்டு, திருச்செந்துதுர் கடலில் குளித்து, விளையாடிக் கொண்டிருந்தும்.
அப்பொழுது என் 2 சவரன் தங்கநகை தொலைந்து விட்டது, தரையில் விழுந்தாலே கிடைப்பது கடினம் அதுவும், மணலில் என்றால் சொல்லவா வேண்டும். இருந்தும் ஒரு நம்பிக்கையில் நீச்சல் அடித்து தேடி பார்த்தேன் கிடைக்கவில்லை.
நானோ ஆட்டோ டிரைவர், என்னால் எப்படி மீண்டும் அதை சம்பாதிக்க முடியும்.. என்று கண்கள் கலங்கிய படி, கடற்கரை மணலில் அமர்ந்த படி.. முருகனை வேண்டி அமர்ந்தேன்.
ஒரு ஐந்து நிமிடம் கழித்து ஒரு பெரிய அலை என் கால்கள் வரை நனைத்து சென்றது, என் கண்ணீரை துடைத்துக் கொண்டே மணலை பார்த்தால், தொலைந்த என் தங்க செயின்..என் காலுக்கு அடியில் இருந்தது. மீண்டும் செயின் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
எனக்கு, இது எப்படி நடந்தது என்று மிகவும் ஆச்சரியமாக இருந்தாலும், எல்லாம் முருகனின் செயல் என்று மகிழ்ச்சியுடன், முருகரை கை எடுத்து கும்பிட்டு.. நன்றி சொல்லி அங்கிருந்து சென்றோம்.
முருகனின் எல்லையை மிதித்தல் மகிழிச்சியுடன் தான் வீடு திரும்புவார்கள், மன வருத்தத்துடன் திரும்ப மாட்டார்கள் என்று என்று சொல்லுவார்கள். அது உண்மை தான்.
மேலும் இதுபோன்ற பல உண்மை கதைகள் பற்றி தெரிந்துக் கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ.லோகேஸ்வரி
Discussion about this post