ஐ.டி ஊழியர்கள் வைத்த குறி..!! கேரளா வாலிபர்களுக்கு சிறை..!!
தாம்பரம் அருகே மெத்தபெட்டமைன் போதை பொருளை விற்பனை செய்தவரை சிறையில் அடைத்தனர்..
பெங்களூரில் இருந்து தாம்பரம் நோக்கி காரில் போதை பொருள் கடத்தபட்டு வருவதாக தாம்பரம் போலீசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்க்கு தாம்பரம் கிஷ்கிந்தா சாலையில் தனிபடை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்..
அப்போது கர்நாடகா பதிவு எண் கொண்ட வெள்ளை நிற கார் வருவதை கண்ட போலீசார் மடக்கி பிடித்து சோதனை செய்தனர் அப்போது காரில் தமிழக அரசால் தடை செய்யபட்டுள்ள மெத்தபெட்டமைன் போதை பொருள் இருப்பதை கண்டுபிடித்தனர்..
பின்பு அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரனை செய்த போது கேரளா மாநிலத்தை சேர்ந்த சனோஜ் அபிஜிரா (40), ராஹீஷ் (27), சுபின்ஷா (26), அப்துல் ஷ்ரிப் (36) என்பது தெரியவந்துள்ளது,
இதனையடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் 71.87 கிராம், ஐந்து லட்சம் மதிப்புள்ள மெத்தபட்டமைன் போதை பொருள், கார், ஏழு செல்போன்கள், போதை பொருள் பயண்படுதற்கான பொருள் ஆகியவற்றை பறிமுதல் செய்து நடத்திய விசாரனையில் பெங்களூரில் இருந்து மொத்தமாக மெத்தபெட்டமைன் வாங்கி வந்து தாம்பரம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்கள் ஐ.டி ஊழியர்கள் முக்கியமாக கிரிண்டர் செயலி மூலம் குறி வைத்து விற்பனையில் ஈடுபட்டதை ஒப்புகொண்டதை அடுத்து வழ்ஃக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்..
இதுவரை ஒரே வாரத்தில் மெத்தபெட்டமைன் விற்பனை செய்ததாக ஏழு நபர்கள் தாம்பரம் காவல் நிலையத்தில் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.