உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த மனு குறித்து எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
அவதூறு வழக்கை நிராகரிக்கக் கோரி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த மனு குறித்து அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோடநாடு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இந்நிலையில், தனக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, எதன் அடிப்படையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின் தரப்பு வழக்கறிஞர், கோடநாடு விவகாரத்தில் மானநஷ்ட வழக்கு தொடர எடப்பாடி பழனிசாமிக்கு முகாந்திரம் இல்லை எனவும் பொது வெளியில் நடந்ததைப் பற்றியே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாக தெரிவித்தார்.
இதையடுத்து, உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை மார்ச் 15-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
மேலும், கோடநாடு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச உதயநிதிக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டித்தும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.