“பாதை முடிந்த பிறகும் இந்த உலகில் பயணம் முடிவதில்லையே”.., நா.முத்துக்குமார் பிறந்தநாள்..!
மண்ணை விட்டு மறைந்தாலும்.., பலரின் மனதில் மறையாமல் வார்த்தைகளால் வாழ்ந்து கொண்டிருக்கும்.., பாடலாசிரியர் நா.முத்துக்குமார் பிறந்தநாள்.
செவி வழியே கேட்கும் அனைத்து பாடலும் மனதில் இடம் பிடிப்பதில்லை.., அப்படி இடம் பிடித்தால் அந்த பாடலின் இசை, வரிகள் மற்றும் பாடலின் குரல் என பல இருக்கும்.., எவ்வளவு தான் காலம் கடந்தாலும் நம்மை பாடலின் வரிகளில் மூழ்க வைப்பது என்னவோ நா.முத்துக்குமாரின் பாடல்கள் மட்டுமே.
காஞ்சிரபுரத்திற்கு காமாட்சி அம்மன், பட்டு புடவைகள் மட்டும் புகழ் சேர்க்கவில்லை நானும் அதில் இருக்கிறேன் என்று காஞ்சிபுரத்தில் பிறந்து வந்தவர் தான், “நா.முத்துக்குமார்”. சரித்திரம் படைக்க வேண்டும் என்ற கனவோடு சென்னை வந்தார், இவர் தமிழ் இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றவர்.
சினிமா ஆசை மனதில் தோன்றியவுடன் வாய்ப்பு தேடி அழைத்துள்ளார். வாய்ப்பு தேடி அழைந்தவரை திறமையானவர் என புரிந்து கொண்டவர் பாலு மகேந்திரன்.., அவரின் உதவியாளராக சேர்ந்த பின் பாடல்கள் எழுத தொடங்கியுள்ளார். அவர் எழுதிய பல பாடல்கள் மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்தது. அதில் ஒரு சில பாடல்கள் தேசிய விருதுகளும் பெற்றன.
தொடக்க காலத்தில் கமர்ஷியல் ஹிட் கொடுத்த இவரின் பாடல்கள் வெளிச்சத்தை பார்க்க தொடங்கியது. இளையராஜாவின் இசையில் ஜூலி கணபதி படத்தில் நா.முத்துக்குமார் பாடல்கள் ரசிகர் கூட்டத்தை உருவாக்க தொடங்கியது.
அதன் பின் செல்வராகவன் மற்றும் நா.முத்துக்குமாரின் காதல் காம்போ.., காதலிக்காதவர் களையும் காதல் உணர்வை தூண்டும் வகையில் அமைந்திருக்கும்..
“நடை பாதை கடையில் உன் பெயர் படித்தால் நெஞ்சுக்குள் எதோ ” என்ற வரியும்
காதல் தோல்வி அடைந்தவர்களுக்காக..,
” சிரிப்பு வரும் அழுகை வரும் காதலில் இரண்டுமே கலந்து வரும்.., ஒரு முறை தான் பெண் பார்பதினால் வருகிற வலி அவள் அறியவில்லை” என்ற வரிகள் காதலில் தோல்வி அடைந்தவர்கள் மட்டுமின்றி அனைவரையும் கண் கலங்க வைத்திருக்கும்.
ஒரு பெண்ணை முதல் முறை பார்த்தவுடன் தோன்றும் காதலை இதை விட எப்படி சொல்லுவது ..?
“என்னானதோ, ஏதானதோ கண்ணாடி போல் உடைந்திடும் மனது..” இவளை பார்த்த இன்பம் போதும் என்ற வரிகளை ஒரு பெண்ணை பார்த்தவுடன் இசைக்காத இளஞர்கள் இல்லை. அதே பெண்ணை நண்பனின் காதலியாக பார்க்கும் பொழுது..,
” என் காதலும் என்னாகுமோ உன் பாதத்தில் மண் ஆகுமோ.., என்றும் உன் விரல் பிடித்திடும் வரம் ஒன்று கிடைக்க உயிருடன் வாழ்கிறேன் நானடி என்றும் மட்டுமே கேட்க தூண்டும்.
இதனை தொடர்ந்து யுவன் ஷங்கர் இசையில் நா.முத்துக்குமாரின் வரிகளில் வரும் பாடல்களுக்கு தனி ரசிகர் கூட்டமே அமைந்தது.
காதலர்களுக்கு மட்டுமா அப்பா மகளின் அன்பையும் இவரால் மட்டுமே சொல்ல முடியும்.
” அடி கோவில் எதற்கு தெய்வங்கள் எதற்கு உனது புன்னகை போதுமடி ” என்ற பாடலுக்காக தேசிய விருதை பெற்றார்.
“தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே“.. என சொல்லி தந்தையின் பாசத்தையும் அவர் பட்ட கஷ்டங்களையும் எடுத்து சொல்லி இருப்பார். இப்படி பலரின் மனதிலும் பல பாடல் வரிகளால் இடம் பிடித்தவர். “மஞ்சள் காமாலையால் ” ஆகஸ்ட் 14ம் தேதி காலமானார்.
இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் அனைவரின் மனதிலும் அவர் எழுதிய பாடல் வரிகள் மூலம் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்.., இந்த நாளில் பிறந்த அவருக்கு அவரது ரசிகர்கள் மட்டுமின்றி திரைபிரபலங்களும் சமூக வலைத்தளம் பக்கத்தில் போஸ்ட் செய்து வருகின்றனர்.