அனுஷ்காவிற்கு திருமணமா..? மாப்பிள்ளை இவரா..? ஷாக்கான ரசிகர்கள்..?
இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் மாதவன் நடிப்பில் உருவான ரெண்டு என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் “அனுஷ்கா ஷெட்டி” தெலுங்கில் எத்தனை படங்கள் நடித்திருந்தாலும் “ரெண்டு” படம் தமிழின் முதல் அறிமுக படம் என சொல்லலாம்.
சினிமாவில் அறிமுகமான பத்து வருடங்களில் 40க்கும் மேற்ப்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் உச்சத்தில் உள்ள நடிகை என்றும் சொல்லலாம்.
அருந்ததி திரைப்படத்தின் மூலம் தனது நடிப்புத்திறனை வெளிப்படுத்தினார். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்ததுடன், அனுஷ்காவுக்கு நல்ல பெயரையும், புகழையும் பெற்றுத்தந்தது.
சுமார் 17 கோடியில் தயாரிக்கப்பட்ட இப்படம் 75கோடியை வசூலித்து சாதனை படத்ததுள்ளது. அதன் பின் இவரது திரை வாழ்கை முற்றிலும் மாறியது. மாறுபட்ட கதை அம்சங்களை கொண்ட திரைப்படங்களாக தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் காட்டினார்.
2017ல் இராஜ மொலி இயக்கத்தில் நடிகர் பிரபாஸ், அனுஷ்கா நடிப்பில் பாகுபலி முதல் பாகம் உருவானது. மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் இந்தி என நான்கு மொழிகளில் திரையிடப்பட்டது.
இந்தி மற்றும் தெலுங்கில் டப்பிங் முறையில் மொழி மாற்றம் செய்யபட்டு திரையிடப்பட்டதாம். 250 கோடி மதிப்பில் உருவான இப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனத்தை பெற்ற நிலையில் இதன் இரண்டாம் பாகமும் நல்ல வரவேற்பை பெற்றது.
தமிழ் சினிமாவை பொருத்த வரை ஒரே நடிகருடன் இரண்டுக்கு மேற்பட்ட படம் நடித்தால் உடனே அவர்கள் காதலிப்பதாக பேசப்படும். அந்த வகையில் அனுஷ்கா பிரபாஸ்-ஐ காதலித்து வருவதாக, பல வருடங்களாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
ஆனால், இவர்கள் இருவரும் இந்த தகவலை பொது வெளியில் இதுவரை ஒத்துக்கொண்டதே இல்லை. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை அனுஷ்காவின் திருமணம் தொடர்பான தகவல் கிடைத்துள்ளது.
42 வயது ஆகியும் திருமணம் செய்துக் கொள்ளாமல் இருக்கும் இவர், பிரபல கன்னட தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்துக் கொள்ள இருப்பதாக, பல்வேறு மீடியாக்களில் செய்திகள் பரவி வருகிறது. இந்த தகவலை அறிந்த ரசிகர்கள், அவருக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
– பவானி கார்த்திக்.
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..