பிறந்த குழந்தையை கொன்று நாடகமாடிய தாத்தா..! போலீசில் சிக்கியது எப்படி..?
அரியலூர் மாவட்டம் உட்கோட்டை வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் வீரமுத்து, ரேவதி தம்பதியரின் மகள் சங்கீதா. சங்கீதாவை கும்பகோணம் அருகே உள்ள சுந்தர பெருமாள் கோயில் வடக்கு வீதியில் வசிக்கும் பாலமுருகன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.
சங்கீதாவிற்கு 38 நாட்களுக்கு முன்னர் ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த குழந்தையுடன் சங்கீதா, உட்கோட்டையில் உள்ள தனது பெற்றோர்களுடன் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 14ம் தேதி அதிகாலையில் தனது குழந்தைக்கு பால் கொடுத்து தூங்க வைத்து விட்டு, சங்கீதாவும் தூங்கியுள்ளார்.
காலையில் எழுந்து பார்த்த போது, தனது அருகில் படுத்திருந்த குழந்தை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். தேடிபார்த்தில் வீட்டுக்கு பின்புறம் இருந்த தண்ணீர் பேரலில் போர்வையுடன் குழந்தை மூழ்கடிக்கப்பட்டு இறந்தகிடப்பது கண்டறியப்பட்டது. அதிர்ச்சி அடைந்த தாய் சங்கீதா கதறி அழுதுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஜெயங்கொண்டம் போலீசார் குழந்தையின் உடலை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவிட்டு, குழந்தையின் இறப்பு குறித்துவிசாரணை நடத்தினர்.
குழந்தையின் தாத்தா வீரமுத்து, பாட்டி ரேவதி ஆகியோரிடம் போலீசார் விசாரணை செய்தில் பொலிசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தியதில் தனது பேரனை தானே கொன்றதாக வீரமுத்து ஒத்துக்கொண்டுள்ளார்.
அவர் அளித்துள்ள வாக்கு மூலத்தில், சித்திரை மாதம் (6.5.24) குழந்தை “சாத்விக்” பிறந்த தால், தனது குடும்பத்திற்கு ஆபத்து என்றும், தனது சம்மந்தி குடும்பத்திற்கும் ஆபத்து என்றும் அனைவரும் கூறியதால் மகள் சங்கீதாவின் திருமணத்திற்கு ஏற்கனவே நிறையகடன் வாங்கியதாலும் மேலும் இந்த குழந்தை பிறந்ததால் இதற்கு சீர் செய்ய கடன் வாங்க இருந்ததாகவும்.
மேலும் தனக்கு மூன்று பெண் பிள்ளைகள் மட்டுமே உள்ளதால் ஆண்மகன் இருந்தால் சித்திரை மாதம் பிறந்த குழந்தையால் தன்னுடைய உயிருக்கு ஆபத்து வரும் என்று அனைவரும் கூறியதால் முதலில் குழந்தையை தூக்கிக்கொண்டு போய் எங்கேயாவது விட்டு விடலாம் என நினைத்தேன்.
ஆனால் உயிர் பயத்தால் கோபத்தில் உணர்ச்சிவசப்பட்டு அதிகாலை குழந்தையை தூக்கிக் கொண்டு தண்ணீர் நிரம்பிய பேரலில் போட்டு போர்வையை போட்டு குழந்தையை கொன்று விட்டு சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக நானும் குழந்தையை தேடுவதை போல நடித்தேன் என கூறியுள்ளார்.
ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராம ராஜன், குழந்தையை கொன்ற தாத்தா வீரமுத்துவை கைது செய்து சிறையில் அடைத்தனர். பிறந்து 38 நாட்களே ஆன பேரனை தண்ணீர் பேரலில் மூழ்கி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
– வெ.லோகேஸ்வரி.