திருமணம் செய்துகொள்ளுமாறு கூறிய தந்தை…. போட்டுத்தள்ளிய மகள்…! போலீசார் விசாரணை..!
ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள மதனப்பள்ளி மாவட்டம்,மேல் குரவங்கா பகுதியில் வசித்து வருபவர் துரைசாமி. இவர் அரசுப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி மனைவி கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். இதனால் துரைசாமி தனது மகள் ஹரிதாவுடன் வசித்து வருகிறார்.
ஹரிதா பி.இ.டி பயின்று இருக்கிறார். இதனிடையே, தந்தை – மகள் இடையே அவ்வப்போது தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
காரணம் ஹரிதாவை திருமணம் செய்துகொள்மாறு கூறியுள்ளார்.அதற்காக ஹரிதாவை வரன் பார்த்து திருமணம் செய்து கொடுக்க தேவையான ஏற்பாடுகளையும் துரைசாமி மேற்கொண்டு வந்துள்ளார்.
இதில் விருப்பம் இல்லாத ஹரிதா, தனது தந்தையின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனிடையே, சம்பவத்தன்று நடந்த சண்டையில் மகள் ஹரிதா தந்தை துரைசாமியை சப்பாத்தி கட்டை மற்றும் இரும்பு கம்பி கொண்டு அடித்துக்கொலை செய்து விட்டு தந்தை தவறி விழுந்து காயமடைந்ததாக அக்கம் பக்கத்தில் கதறி, நாடகமாடியுள்ளார்.
பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மருத்துவ குழுவினர் துரைசாமியின் மரணத்தை உறுதி செய்தனர்.
போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து வழககு பதிவு செய்துள்ள போலீசார் துரைசாமியின் மாமா மகன் அளித்த சந்தேக மரணம் என்ற புகாரை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
அந்த புகாரில், ஹரிதா வேறொருவரை காதலித்து வந்ததாகவும், அவருக்காக பலமுறை நிதி சார்ந்த உதவி செய்ததாகவும் கூறியுள்ளார். மேலும், ஹரிதா ரூ.80 இலட்சம் மதிப்புள்ள மதனப்பள்ளி வீட்டை தந்தையின் பெயரில் இருந்து சமீபத்தில் தனது பெயருக்கு சண்டைகள் செய்து மாற்றிக்கொண்டார் எனவும் கூறியுள்ளார்.
இதனால் சொத்துக்காக மகள் தந்தையை அடித்து கொலை செய்தாரா? திருமணம் செய்ய வற்புறுத்தியதால் நடந்த கொலையா? வேறு காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. மேலும் ஹரிதாவின் காதலர் குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகின்றன.
-பவானி கார்த்திக்