கடிதம் எழுதி வைத்து தற்கொலை… சிறுவன் செய்த செயலால் கதறும் தாய்…..!
விழுப்புரம் மாவட்டம் வடுகுப்பம் பகுதியை சேர்ந்தவர் பூரணி (35).இவருக்கு விக்னேஷ் என்ற ஒரு மகன் உள்ளார். இவர்கள் இருவரும் ஒன்றரை மாதத்திற்கு முன்பு உறவினர் உதவியுடன் புதுச்சேரி திருபுவனை பகுதியில் குடி பெயர்ந்தனர்.
இதனிடையே நேற்று முன்தினம் பூரணி வேலைக்கு சென்று இரவு பணி முடிந்து வீடு திரும்பிய போது வீட்டில் இருந்த சிறுவன் தற்கொலை செய்து இறந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி துடித்த தாய் பூரணி செய்வதரியாமல் நின்றுள்ளார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து சிறுவன் எழுதி வைத்திருந்த கடிதத்தை தற்போது போலீசார் கைப்பற்றியுள்ள நிலையில் அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-பவானி கார்த்திக்