13 வயது சிறுவனின் செயலால் உறைந்து போன குடும்பத்தினர்..!
திருப்பூர் மாவட்டம் போயம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் இவருக்கு திருமணமாகி லீலாவதி என்ற மனைவியும் இரண்டு மகன்கள் உள்ளனர்.
இதில் இளைய மகன் தினேஷ்குமார்(13) 6-ம் வகுப்பு படித்து வந்த நிலையில், இவருக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.
இதனைதொடர்ந்து, சம்பவ தினத்தன்று தினேஷ்குமார் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் திடீரென தற்கொலை செய்து கொண்டார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர்கள் கதறி துடித்தனர்.
பின்னர் அனுப்பர்பாளையம் காவல் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, நிகழ்விடத்திற்கு விரைந்த போலீசார் தினேஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து 13 வயது சிறுவன் தற்கொலை செய்துள்ள என்னகாரணம் என்பதை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்