ராபத்து உற்சவத்தின் ஒன்பதாவது நாளாக மோகனவதார அலங்காரத்தில் பெருமாள்…
மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ஆலயத்தில் நடைபெற்று வரும் ராபத்து உற்சவத்தின் ஒன்பதாவது நாளாக மோகனவதார அலங்காரத்தில் பெருமாள் அருள்பாளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் நடைபெற்ற வைகுண்ட ஏகாதசியினை தொடர்ந்து ராபத்து நடைபெற்று வருகிறது. ராபத்து ஒன்பதாவது நாளாக இரவு ராஜகோபாலசுவாமி மோகனவதார அலங்காரத்தில் கையில் வீணை ஏந்தி, திருக்கோலத்தில் உலா வந்தார்.
சன்னதியில் இருந்து புறப்பட்ட பெருமாள் சொர்க்கவாசல் மண்டபம் அருகில் தீபாராதணை காட்டப்பட்டது. யானை செங்கமலம் மோகனவதாரத்தில் இருந்த ராஜகோபாலனை மூன்றுமுறை சாமரசம் வீசியபடி வலம் வந்தது.
இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.