மத்திய மாவட்டங்களில் பரபரப்பாக நடந்து முடிந்த தேர்தல் பிரச்சாரம்..! வெற்றி யாருக்கு..?
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மே 19ஆம் தேதி துவங்கவுள்ள நிலையில், நேற்றுடன் தேர்தல் பிரச்சாரம் பரபரப்பாக நடந்து முடிந்தது.
ஒரு புறம் பாஜக கூட்டணி கட்சிகள் தமிழகத்தில் தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க தீவிரமாக இயக்கி வருகின்றனர். அதே சமயம் காங்கிரஸ், திமுக, மதிமுக போன்ற பிற கட்சிகள் இணைந்த இந்தியா கூட்டணியும் தமிழகத்தில் கடுமையான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் அதிமுக கட்சியினரும் பரபரப்பான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் மத்திய மாவட்டங்களான திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுந்துறை, நாகப்பட்டினம், கரூர், பெரம்பலூர் போன்ற மாவட்டங்களின் தேர்தல் முடிவுகளே, தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
திருப்பு முனை வாய்ந்த மாவட்டம் :
தமிழக அரசியல் வரலாற்றில் திருச்சி தொகுதி திருப்பு முனையாக இருந்துள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த திருச்சியில், கடந்த முறை காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட திருநாவுக்கரசர் வெற்றி பெற்றார்.
இந்த முறை திமுக கூட்டணியில் மதிமுகவின் முதன்மை செயலாளர் துரை வைகோ, அதிமுக கூட்டணி சார்பில் கருப்பையா, பாஜக கூட்டணியில் அமமுக சார்பில் செந்தில்நாதன், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜல்லிக்கட்டு ராஜேஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
திருச்சியை பொருத்தவரை மதிமுகவின் முதன்மை செயலாளர் துரை வைகோ தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவரை ஆதரித்து திருச்சி மாவட்டத்தை சேர்ந்த இரு அமைச்சர்களான கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தேர்தல் களப்பணி ஆற்றி வருகின்றனர். இதில் தீப்பெட்டி சின்னத்தில் களமிறங்கும் துரை வைகோ பெருவாரியாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினும், அதிமுக சார்பாக எடப்பாடி பழனிச்சாமியும் திருச்சி தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய கூட்டணி கட்சியின் தலைவர் ராகும் காந்தியும் திருச்சி தொகுதியில் பிரச்சாரத்தை புறங்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பரபரப்பாக நடந்த தேர்தல் பிரச்சாரம் :
கரூரில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில், கரூர் நகரில் திரு.தங்கவேல் ஆதரவு கோரி, மோட்டார் சைக்கிள் பேரணி நடந்தது.
கரூர் நகரின் முக்கிய பகுதிகளில் நடந்த பேரணியில் அதிமுக மற்றும் தேமுதிக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதேபோல், காங்கிரஸ் மற்றும் திமுக தொண்டர்களும் திருமதி ஜோதிமணிக்கு வாக்களிக்க பேரணி நடத்தியுள்ளனர்.
போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் அரியலூரில் சிதம்பரம் தொகுதி வேட்பாளர் திருமாவளவன். இதில் திமுக, விசிகே, மதிமுக உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர். மேலும் அரியலூர் நகரின் முக்கிய சாலைகள் மற்றும் தெருக்களில் அதிமுகவினர் மோட்டார் சைக்கிளில் பேரணி நடத்தினர்.
இப்பேரணிக்கு மாவட்டச் செயலர் தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமை வகித்தார். அரியலூர், ஜெயங்கொண்டம், குன்னம், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், புவனகிரி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய சிதம்பரம் தொகுதியில் 14 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில் நாளை தேர்தல் நடைபெறுவதை ஒட்டி, நேற்றே தேர்தல் பிரச்சாரங்கள் முடிவுக்கு வந்துள்ளன. தமிழகத்தின் மத்திய மாவட்டங்களின் தேர்தல் முடிவுகள் மிக முக்கிய பங்கு வகுக்ககூடிய ஒன்றாக இருப்பதால் வெற்றி யாருக்கு என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..