பெண் நோயாளிக்கு முத்தம்.. வசமாக சிக்கிய மருத்துவர்.. விளாசிய நீதிபதி..!
பெங்களூரு ஜேபி நகரில் உள்ள மருத்துவமனையில் நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
அந்த இளம் பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் ஈசிஜி மற்றும் மார்பு எக்ஸ்ரே எடுக்க பரிந்துரைத்தனர்.
மேலும் அந்த பெண்ணிடம் அறிக்கைகளை வாட்ஸ்அப்பில் பகிருமாறும் மருத்துவர் கேட்டுக் கொண்டுள்ளார். அந்த பெண்ணும் ECG மற்றும் X-ray எடுத்து மருத்துவரிடம் வாட்ஸ்அப்பில் அறிக்கைகளை பகிர்ந்து கொண்டார்.
இதையடுத்து, “கடந்த மார்ச் 21ஆம் தேதி அன்று மதியம் 2 மணியளவில் ஜர்கனஹள்ளியில் உள்ள தனது கிளினிக்கிற்கு வரும்படி மருத்துவர் கூறியுள்ளதை அடுத்து அந்த இளம் பெண்ணும் கிளினிக்கிற்குச் சென்றுள்ளார்.
அப்போது அங்கு மருத்துவர் மட்டும் இருந்த நிலையில் . அப்பெண்ணை ஒரு அறைக்கு அழைத்துச் சென்று இதயத் துடிப்பைச் சரிபார்க்க தொடங்கிய மருத்துவர் அந்த பெண்ணிடம் சட்டை மற்றும் உள்ளாடைகளை கழற்றும்மாறு கூறியுள்ளார்.
ஐந்து நிமிட பரிசோதனைக்குப் பிறகு, மருத்துவர் அந்தப் பெண்ணினிடம் பாலியல் அத்துமீறலில் ஈ்டுப்பட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் கிளினிக்கை விட்டு ஓடி வந்து தனது குடும்பத்தினரிடம் நடந்ததை கூறியுள்ளார். மேலும் புத்தனேஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இளம்பெண்ணின் ஆடைகளை கழற்றும்படி கூறிய மருத்துவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மருத்துவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில் அந்த பெண் கூறும் என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்றார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிமன்றம், மருத்துவர் மீதான குற்ற வழக்கை ரத்து செய்ய மறுத்துவிட்டது.
மேலும், ஒரு மருத்துவர் மீது உள்ள நம்பிக்கையைத் தவறாகப் பயன்படுத்தினால், மருத்துவருக்கும் நோயாளிக்கும் இடையே நம்பிக்கை உறவும் பாதிக்ககூடும்.
தேவையற்ற மற்றும் வெளிப்படையான பாலியல் தூண்டுதல் இருந்ததால் மருத்துவர் மீது பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்கை ரத்து செய்ய முடியாது என்று நீதிபதி எம்.நாகபிரசன்னா அதிரடியாக கூறினார்.
அதனை தொடர்ந்து புகார்தாரரிடம் பாலியல் தொந்தரவில் ஈடுப்பட்ட மருத்துவரின் இந்த நடத்தை ஐபிசியின் 354A(1)(i) பிரிவின் கீழ் குற்றம் என்று அவர் கூறினார்.
மேலும், நோயாளியின் உடலை பரிசோதிக்க மருத்துவருக்கு உரிமை உண்டு. ஆனால் அதை வேறு எந்த உணர்ச்சிக்கும் பயன்படுத்த கூடாது.
நோயாளிகள் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருக்கும்போது அவர்களின் உதவியை நாடுகிறார்கள் என்பதை மருத்துவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
அத்தகைய சூழ்நிலையை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது. மேலும் ஒரு பெண் நோயாளியை ஆண் மருத்துவர் பரிசோதிக்கும்போதும் மற்றும் உடல் பரிசோதனையின் போது மற்றொரு பெண்ணும் இருக்க வேண்டும்.
ஆனால் மருத்துவர் அந்த வழிகாட்டுதல்களை மீறியதால் அவரது மனு நிராகரிக்கப்பட்டது என்று நீதிபதி கூறியுள்ளார்.
-பவானி கார்த்திக்