கள்ளக்காதலனின் வீட்டில் பிணமாக இருந்த காதலி.. விசாரணைக்காக சென்ற போலீசாருக்கு அதிர்ச்சி..!
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் ரீஜா (45). திருமணமான இவர் சில வருடங்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.
இந்தநிலையில்,ரீஜாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியான பிரமோத் (35) என்பவருடன் நட்பாக பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதன் காரணமாக ரீஜா அடிக்கடி பிரமோத்தின் வீட்டிற்கு சென்று வருவது வழக்கம்.
இந்தநிலையில் நேற்று காலை வீட்டிலிருந்து வெளியே சென்ற ரீஜா அதன்பின்னர் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த ரீஜாவின் உறவினர்கள் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த திருவணந்தம் போலீசார் விசாரணையில் ஈடுப்பட்டனர். விசாரணக்காக பிரமோத்தின் வீட்டிற்கு சென்றபோது அங்கு ரீஜா கையிலும், கழுத்திலும் வெட்டுக் காயங்களுடன் பிணமாக கிடந்தார். மேலும் உள்ளே சென்று பார்த்தபோது பிரமோத் தற்கொலை செய்து கொண்டு இறந்து கிடந்தார்.
பின்னர் இருவரின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இருவரின் இறப்பிற்கான காரணம் குறித்து திவீர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்