வாலிபரின் திடீர் முடிவால் கலங்கிய உறவினர்கள்.. பல கோணங்களில் போலீஸ் விசாரணை..!
திருவள்ளூர் மாவட்டம் நல்லத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ் (25). இவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இந்தநிலையில் இவர் சில வருடங்களாக ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். வேலை நிமித்தம் காரணமாக வெளிநாட்டிற்கு சென்ற அப்பெண் தற்போது அங்கு செட்டிலாகி உள்ளார். இதனால் ஆகாஷிடம் சரிவர பேசாமல் ஆகாஷின் சென்போன் அழைப்புகளையும் துண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆகாஷ் சில நாட்களாகவே மன் வேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு தனது காதலியிடம் செல்போனில் பேசியபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலின் உச்சிக்கு சென்ற ஆகாஷ் நேற்று இரவு மருத்துவமனையின் ஓர் அறையில் சென்று தற்கொலை செய்து கொண்டார்.
இதனை கண்ட சக ஊழியர்கள் சம்பவம் குறித்து ராயப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், இறந்த ஆகாஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் காதல் பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது பணி சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா என்று திவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இச்சம்பவத்தால் ராயப்பேட்டை மருத்துவமனையில் பரபரப்பு சூழல் நிலவியது.
-பவானி கார்த்திக்