9 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!! தச்சுத் தொழிலாளி கைது…!!
ஜெயங்கொண்டம் அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தச்சுத் தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கழுவந்தோண்டி கிராமம் வடக்கு காலனி தெருவை சேர்ந்த தச்சு தொழிலாளியான ஐயப்பன் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த 9 வயதுடைய சிறுமியை தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர்கள் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் மகளிர் காவல்துறையினர் ஐயப்பன் மீது வழக்கு பதிந்து போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.